Header Ads



ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில், இனிமேல் இழுத்தடிப்புக்கு இடமில்லை : சஜித்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் முன்னெடுத்த பேச்சுவார்த்தை எனக்கு சாதகமானதாகவே கருதுகிறேன்.

இன்னும் சில தினங்களில் மக்கள் எதிர்பார்க்கும் ஆரோக்கியமான செய்திகள் அறிவிக்கப்படும் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பில் இனியும் இழுத்தடிப்புக்கு இடமில்லை, அதேபோல்  நான் முன்வைத்த காலை பின்வைக்கப் போவதுமில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். 

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பிரச்சினைகள் மற்றும் கட்சிக்குள் எழுந்துள்ள ரணில் - சஜித் பிரச்சினைகள் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் நேற்று இரவு இடம்பெற்ற பேச்சுவார்த்தை குறித்து  கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

(ஆர்.யசி)

No comments

Powered by Blogger.