Header Ads



தெமடகொட - மஹவில கார்டன் வீடொன்றில், வெடிப்புச் சம்பவம்

தெமடகொட, மஹவில கார்டன் பகுதியில் உள்ள வீடொன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

இன்று -15- காலை 8.45 மணி அளவில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவத்தில் இரு பெண்கள் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதற்கான காரணம் இதுவரையில் இனங்காணப்படவில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் தெமடகொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.