"சுதந்திரக் கட்சியின் ஆதரவு தனக்கு, கிடைக்குமென கோத்தபாய நம்பிக்கை"
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு தனக்கு கிடைக்குமென ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் ராஜபக்ஷ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையில் நேற்றைய தினம் எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் சந்திப்பொன்று நடத்தப்பட்டிருந்தது.
இந்த சந்திப்பின் போது இரு கட்சிகளும் தேர்தலில் இணைந்து செயற்படுவது தொடர்பான எட்டாம் கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்தது.
இந்த பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கோத்தபாய இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சுதந்திரக் கட்சியுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. அந்த கட்சியின் ஆதரவு தனக்கு கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
எனினும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் போட்டியிடும் என அதன் பொது செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment