Header Ads



வீடமைப்பு குறித்து மாத்திரமே சஜித் பேசுகிறார், அவரை தோற்கடிக்க வேண்டும் - மஹிந்த


எந்த சின்னத்தில் போட்டியிட்டாலும், தற்போதைய அரசாங்கம் முன்னிறுத்தும் வேட்பாளரை தோற்கடிப்பதற்கு மக்கள் செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற பௌத்த சடங்குளுடன் தொடர்புடையவர்களுடனான நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வீடமைப்புத் திட்டங்கள் தொடர்பில் சஜித் பிரேமதாஸ கருத்து வெளியிடுகின்றார்.

ஆனால், பொருளாதார அபிவிருத்தி மற்றும் வடக்கு, கிழக்கு பிரச்சினை தொடர்பில் அவர் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

இதேவேளை, இந்த நிகழ்வில் உரையாற்றிய ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, சடங்குகள் என்பது விஞ்ஞான ரீதியில் சரியா? தவறா? என்பதற்கு அப்பால், அதனைப் பாதுகாப்பது கலாசாரத்திற்கு முக்கியமானதாகும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இந்தத் துறையில் ஈடுபடுபவர்களை பாதுகாப்பதற்கு எதிர்கால அரசாங்கத்தில் தேவையான ஒத்துழைப்பை வழங்க உள்ளதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.