Header Ads



மைத்திரியை பீடித்தது பதவியாசை, ஆரோக்கியமாக உள்ளதால், அரசியலிலிருந்து ஓய்வுபெற மாட்டேன் என்கிறார்

தனக்கு அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதற்கான தேவை கிடையாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் இன்று -28- இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

மக்களுக்காக தான் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னோக்கி கொண்டு செல்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தான் சிறந்த உடல் நலத்துடன் இருப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

வரலாற்றில் சிறந்த வேலைத்திட்டங்களை பொலன்னறுவை மாவட்டத்திற்காக தான் முன்னெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. உலகில் உள்ள அலிபபாக் கூட்டங்களுக்குஒரு இணையற்ற லீடர்.

    ReplyDelete

Powered by Blogger.