Header Ads



தேர்தலை வழிநடத்துவதற்காக 40 விசேட குழுக்கள்

ஜனநாயக தேசிய முன்னணி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட மறுதினம் ஐ.தே.கவின் வருடாந்த தேசிய மாநாட்டை கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

மாநாட்டை தொடர்ந்து எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி காலிமுகத்திடலில் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தை நடத்தவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. 

அத்துடன், தேர்தலை வழிநடத்துவதற்காக அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைமையில் 40 விசேட குழுக்களையும் ஐ.தே.க. நியமித்துள்ளது. இக் குழுக்கள் தமது செயற்பாடுகளை நாடுதழுவிய ரீதியில் ஆரம்பித்துள்ளதாகவும் அறிய முடிகிறது.

No comments

Powered by Blogger.