11 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை எதிர்வரும் சில தினங்களுக்கு தொடரும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் வடமேல் மாகாணத்திலும். காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் 100 முதல் 150 மில்லி மீற்றர்வரை மழை வீழ்ச்சி பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் வவுனியா , முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் என்பதோடு, பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடனான மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
குருணாகல், மாத்தளை, கம்பஹா, கேகாலை, கண்டி, நுவரெலியா, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு அதிக மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இடியுடனான மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலயத்திற்கு 70 - 80 கிலோ மீற்றர் வரை காணப்படும். இதன் போது கடல் சற்று கொந்தழிப்புடன் காணப்படும் என்பதால் மீனவர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் வடமேல் மாகாணத்திலும். காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் 100 முதல் 150 மில்லி மீற்றர்வரை மழை வீழ்ச்சி பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் வவுனியா , முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் என்பதோடு, பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடனான மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
குருணாகல், மாத்தளை, கம்பஹா, கேகாலை, கண்டி, நுவரெலியா, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு அதிக மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இடியுடனான மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலயத்திற்கு 70 - 80 கிலோ மீற்றர் வரை காணப்படும். இதன் போது கடல் சற்று கொந்தழிப்புடன் காணப்படும் என்பதால் மீனவர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Post a Comment