ஐதேக. Mp களின் கூட்டம் நாளை - சஜித்தை தனியாக சந்திக்கும் பின்வரிசையினர்
அலரிமாளிகையில் நாளை பிற்பகல் 4.00 மணியளவில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளரைப் பெயரிடுதல், ஜனாதிபதி தேர்தலுக்காக ஐக்கிய தேசிய முன்னணியுடன் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஸ்தாபிக்கவுள்ள புதிய கூட்டணி மற்றும் நாடாளுமன்ற செயற்பாடுகள் என்பன தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன.
இதேநேரம், அந்த நாடாளுமன்ற குழுக் கலந்துரையாடலின் பின்னர், ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாஸவை சந்திக்கவுள்ளனர்.
முன்னதாக ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசவை சந்திக்கவிருந்த நிலையில், அந்தச் சந்திப்பு பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment