கோத்தபாயவை சிக்கவைக்க திட்டம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபாயவை கொலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார்.
குற்ற விசாரணை திணைக்களத்தின் பொலிஸ் அதிகாரிகளினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேரர் குற்றம் சாட்டியுள்ளார்.
வழக்குகள் தொடர்பில் இராணுவ அதிகாரிகள் சிலரை கைது செய்து அவர்களை அரச சாட்சியாளர்களாக மாற்றுவதன் மூலம் கோத்தபாயவை சிக்க வைக்க திட்டமிடப்பட்டள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் காலங்களில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் பொலிஸ் பிரதானி அவுஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment