பிள்ளைகளுக்கு நஞ்சு கொடுத்து, கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை
புத்தளம், உடப்புவ, பள்ளிவாசல்பாடுவ பகுதியில் 31 வயது நிரம்பிய தந்தை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, தற்கொலை செய்து கொண்டுள்ள தந்தை தனது ஆண் பிள்ளைகள் இருவருக்கும் நஞ்சு வழங்கி அவர்களையும் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த ஆண் பிள்ளைகள் 13 மற்றும் 7 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த ஆண் பிள்ளைகளின் சடலங்கள் புத்தளம் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாவும், தந்தையின் சடலம் வீட்டு அறையிலேயே வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
புத்தளம் பிரிவு பொலிஸார் குறித்த மரணங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்படியான கோழைகல் தாம் மட்டும் இறந்து போகாமல்,வாழ வேண்டிய பிள்ளைகளையும் கொலை செய்வது மிகவும் பரிதாபமானது.
ReplyDeletevery sad news...
ReplyDelete