ஜனாதிபதி தேர்தல், நாய்களின் சண்டையாக மாறியுள்ளது - ஆனந்த தேரர்
நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் நாட்டின் அனைத்து பிக்குமார்களும் ஒன்றிணைந்து, ஒரு நோக்கத்திற்காக செயற்படவேண்டும் என பெவிதி ஹன்ட அமைப்பின் ஏற்பாட்டாளர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்டவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தற்போதைய நிலையில், ஜனாதிபதி தேர்தல் நாய்கள் சண்டையாக மாறியுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
மேலும்,நாட்டிற்காக ஏதேனும் செய்த தலைவரின் அவசியத்தை உணர்ந்திருப்பதாகவும், அதன் காரணமாக ஒழுக்கமிக்க ஆட்சியாளர் ஒருவர் நம்மால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடதக்கது.
சாமி நாய்களை கேவலப்படுத்திட்டீங்க...
ReplyDelete