Header Ads



தலைமைத்துவத்தை ரணில், ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டார் : ரமேஷ் பதிரண

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தினை பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒருபோதும் பிறருக்கு விட்டுக் கொடுக்கமாட்டார்.

ஜனாதிபதி வேட்பாளர் அறிவித்தவுடன்   ஐக்கிய தேசிய கட்சிக்குள்  இடம் பெறும் பனிபோர்  வெளிப்படும் என பாராளுமன்ற உறுப்பினர்  ரமேஷ் பதிரண தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று -02- இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தற்போது பல விதமான  சர்ச்சைகள் அனைத்து அரசியல் கட்சிகளின் மத்தியிலும் காணப்படுகின்றன. 

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது எதிர்வரும்  11ம் திகதி எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகப்பூர்வமாக நாட்டு மக்களுக் அறிவிப்பார். ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில்  எதிரணிக்குள் எவ்வித  முரண்பாடுகளும் கிடையாது என அவர் இதன்போது தெரிவித்தார்.

(இராஜதுரை ஹஷான்)

No comments

Powered by Blogger.