Header Ads



நான் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்ததாக, பரப்பும் தகவல்களில் உண்மை இல்லை - குமார வெலகம


தொழிற்பயிற்சி நிலையம் ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதமருடன் கலந்துக்கொண்டதால் தான் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்டதாக சிலர் பொய்யான தகவல்களை வெளியிடுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெலகம தெரிவித்துள்ளார். 

பண்டாரகம மாவட்ட வைத்தியசாலை கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார். 

தான் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு உரித்தானவர் எனவும் சமூக அக்கறையுடன் மாத்திரமே பிரதமருடன் இணைந்து நிகழ்வில் கலந்துக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். 

இதனை மையப்படுத்தி தான் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்டதாக சிலர் பரப்பும் தகவல்களில் உண்மை இல்லை எனவும் அவர் கூறினார். 

எவ்வாறாயினும் விரும்பியதை செய்ய தனக்கு உரிமையுள்ளதாகவும் ஆனால் ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ள போவது இல்லை எனவும் தெரிவித்தார். 

எதிர்காலத்தில் நாட்டை பொறுப்பேற்பவர் ஜனநாயகத்திற்கு எதிராக செயற்படாதவராகவும், விமர்சனங்களை ஏற்பவரும் மற்றும் ஊடகவியலாளர்களை துன்புறுத்தாவருமாக இருக்க வேண்டும் எனவும் குமார வெலகம மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.