Header Ads



எனது மனைவியையும் விசாரணைக்கு அழைப்பார்கள், என்ற அச்சத்தினாலே திருமணத்தை தாமதித்தேன் - நாமல்

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவின் மூத்த மகன் நாமல் ராஜபக்ச தனது திருமண நிகழ்விற்கான அழைப்பிதழ் பகிரும் நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளார்.

எதிர்வரும் 17ஆம் திகதி ஷங்கிரிலா ஹோட்டலில் திருமண நிகழ்வு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

ஷங்கிரிலா ஹோட்டலில் திருமண நிகழ்வு இடம்பெறவுள்ள நிலையில், 12 மற்றும் 14ஆம் திகதி திருமணத்திற்கான இரண்டு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

திருமண நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அவரது நணர்களுக்காக வீரக்கெட்டிய மெதமுலன வீட்டில் விருந்து இடம்பெறவுள்ளது.

கடந்த வாரம் நாடாளுமன்றத்திற்கு சென்றிருந்த நாமல் ராஜபக்ச, 225 உறுப்பினர்களுக்கும் தனித் தனியாக அழைப்பிதழ் வழங்கி அழைப்பு விடுத்துள்ளார்.

நாமலின் நண்பரும் மாவட்ட உறுப்பினருமான டீ.வீ.சானக நாமலுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக அழைப்பிதழ்களை வழங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

எப்படியிருப்பினும் நாடாளுமன்றத்தின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கான அழைப்பிதழ்களை நாமல் ராஜபக்ச வழங்கியுள்ளார்.

மணமகளும் நிதி குற்ற விசாரணை பிரிவிற்கு அழைக்கப்படுவார் என்ற அச்சம் காரணமாகவே தனது திருமணத்தை தாமதப்படுத்தியதாக நாமல் குறிப்பிட்டுள்ளார்.

நாமலுக்கு முன்னரே அவரது இரண்டு சகோதரர்களும் திருமணம் செய்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. Is it means now All the allegations are cleared and this Young TOUGH is ready for marriage...
    "WONDER OF ASIA'

    ReplyDelete

Powered by Blogger.