எமக்கு இப்போது இணைந்துகொள்ள முடியுமான, ஒரே முகாம் கோத்தபாயவினுடையது மாத்திரமே
நான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொள்ளப் போகிறேன் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று -27- கருத்து வெளியிட்ட அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எனும் வாகனத்தில் பயணிக்க ஏறியுள்ளவர்கள், ஒவ்வொரு தரிப்பிடத்திலும் நால்வர், ஐவர் என இறங்கிக் கொள்கின்றனர்.
எமக்கு இப்போது இணைந்துகொள்ள முடியுமான ஒரே முகாம் கோத்தபாய ராஜபக்ஸவினுடையது மாத்திரமே எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, வேறு கட்சிகளுடன் தொடர்பில் இருக்கும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் அண்மையில் இடம்பெற்ற பொதுஜன பெரமுணவின் தேசிய சம்மேளனத்தில் ரெஜினோல்ட் குரே உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிலையிலேயே, தான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொள்ளப் போவதாக ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ரெஜினோல்ட் குரே வடமாகாணத்தின் ஆளுநராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
You proved there is nothing inside your head also
ReplyDelete