7 நாட்களுக்குள் முடிவை எடுங்கள் - ரணிலிடம் 50 Mp க்கள் கோரிக்கை
ஐக்கிய தேசியக் கட்சியின் சுமார் 50 ற்கும் மேற்பட்ட எம் பிக்கள் இன்று பிரதமரும் கட்சித் தலைவருமான ரணிலிடம் கடிதம் ஒன்றை கையளித்தனர்.
கட்சியின் பாராளுமன்ற குழுவையும் செயற்குழுவையும் கூட்டி ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் ஒரு முடிவை ஏழு நாட்களுக்குள் எடுக்குமாறு எம் பிக்கள் இந்தக் கடிதத்தில் கேட்டுள்ளனர்.
இதேவேளை இந்த கோரிக்கை குறித்து ஆறுதலாக ஆராயலாமென பிரதமர் ரணில் சில எம் பிக்களிடம் கருத்து வெளியிட்டுள்ளதாக தகவல்.
அரசியல் கூட்டணி குறித்து முதலில் விவாதிக்க வேண்டுமென அவர்களிடம் ரணில் தெரிவித்துள்ளார். Tn
Post a Comment