Header Ads



ஐ.தே.க. க்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்த்துக்கொள்ள எதிர்வரும் 31ம் திகதி வரை சந்தர்ப்பம்

ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான கூட்டணியை உருவாக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னர் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனநாயக தேசிய கூட்டணியை உருவாக்க இருந்த அனைத்து பிரச்சினைகளும் கடந்த சனிக்கிழமை தீர்க்கப்பட்டு விட்டன.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்த்துக்கொள்ள எதிர்வரும் 31ம் திகதி வரை சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னர் ஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் உருவாக்கப்படும் கூட்டணி, அதன் ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்து, ஜனநாயக தேசிய முன்னணியின் ஜனாதிபதித் தேர்தல் பணிகளை ஆரம்பிக்க உள்ளதாகவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.