Header Ads



ஐதேக தடுமாற்றம், 3 ஆக உடையுமென்கிறார் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன Mp

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக்கூடிய வேட்பாளரை தெரிவு செய்வதில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தடுமாற்றம் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில், அடுத்து வரும் ஓரிரு வாரங்களுக்குள் ஐக்கிய தேசியக் கட்சி மூன்று துண்டுகளாக உடைந்து விடும்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க குழு, அமைச்சர் சஜித் பிரேமதாஸ குழு மற்றும் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொள்ளும் குழு என்றவாறு குழுக்கள் உருவாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.