Header Ads



அரசாங்கம் எத்தேர்தலை நடத்தினாலும் பதிலடியினை வழங்க தயார் - மஹிந்த

(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கம் எத் தேர்தலை நடத்தினாலும் ஜனநாயக ரீதியில் பதிலடியினை  வழங்க தயார் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அத்துடன் உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கும் அதிகாரம் தனக்கு முழுமையாக காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற  வாராந்த கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரசியல் பழிவாங்கள் , அதிகார போட்டி இவ்விரண்டிற்கும் மாத்திரம் நடப்பு அரசாங்கம் முக்கியத்துவம் கொடுத்தது. இதன் விளைவே  இன்று ஒட்டுமொத்த மக்களையும் பாதித்துள்ளது என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.