Header Ads



"பல வலிகளை அனுபவித்த மலிங்கா"


லசித் மலிங்கா இன்று -26- தனது கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ள நிலையில் அவருக்கு சக இலங்கை வீரர் கவுசல் சில்வா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா இன்று வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியுடன் ஓய்வு பெறுகிறார்.

பந்துவீச்சில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள மலிங்கா குறித்து இலங்கை வீரர் கவுசல் சில்வா தனது டுவிட்டரில், நீங்கள் நாட்டுக்காக குறிப்பிடத்தக்க விடயங்கள் பலவற்றை செய்துள்ளீர்கள்.

நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பல வலிகளை அனுபவித்துள்ளீர்கள், பந்துவீச்சின் மூலம் நீங்கள் பல சாதனைகள் செய்துள்ளீர்கள்.

அடுத்த தலைமுறைக்கு நீங்கள் ஊக்கமளிக்கும் வழிகாட்டி என புகழாரம் சூட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.