Header Ads



என்னை தூக்கில், போட முடியுமா...?

இந்த அரசாங்கம் தம்மை தூக்கில் இடுமா என நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்வபம் தொடர்பிலான நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணைகளில் தாம் முன்னிலையாகாமைக்கு சில காரணிகள் உண்டு என தெரிவித்துள்ளார்.

இந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில் சில பிணக்குகள் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகளில் பாரிய சிக்கல்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் முன்னிலையாகாத காரணத்தினால் எந்த தவறையும் தாம் இழைக்கவில்லை எனவும் நாடாளுமன்ற சிறப்புரிமைகளை பாதுகாத்துக் கொண்டுள்ளதாகவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. தாராளமாக போட முடியும். ஆனால் சாதாரண மலிவான தூக்கு கயிற்றையே பயன்படுத்த வேண்டும். Cheep things for cheepest people.

    ReplyDelete
  2. ஏன் உண்ணை தூக்கில் போட முடியுமா என்று கேட்கிறாய் நீ என்ன அவ்வளவு பாரமா?

    ReplyDelete

Powered by Blogger.