"விக்னேஸ்வரனின்ரது மூளையை, அரசு பரிசோதனை செய்ய வேண்டும்"
கிழக்கு மாகாணத்தில் உள்ள மொத்த முஸ்லிம் கிராமங்களின் எண்ணிக்கை சுமார் முன்னூறையே எட்டும் நிலையில் 300 தமிழ் கிராமங்கள் முஸ்லிம் கிராமமாக மாறியுள்ளதாக விக்னேஸ்வரன் சொல்வதன் மூலம் அவரது மூளையை அரசு பரிசோதனை செய்ய வேண்டும் என முஸ்லிம் உலமா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்ததாவது,
விக்னேஸ்வரன் அவர்கள் வடமாகாண சபையின் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்ட போது அவரை வாழ்த்தியவர்கள் நாம். முன்னள் நீதியரசரான அவரது ஆட்சியில் தமிழ், முஸ்லிம் உறவு வளரும் என எதிர் பார்த்தோம். ஆனால் அவரும் எல்லோரையும் போல் இனவாதம் உள்ளவராகவே கண்டோம். வட மாகாண முஸ்லிம் மீள் குடியேற்றத்துக்கும் இவர் தடை விதித்தார்.
இப்போது கிழக்கில் முன்னூறு தமிழ் கிராமங்களும் ஒன்பதினாயிரம் தமிழ் பெண்கள் இஸ்லாத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் உலக மகா பொய்யை சொல்லியுள்ளார்.
எப்படி சிங்கள இனவாதிகள் டொக்டர் ஷாபி 4000 சிங்கள பெண்களை கர்ப்பம் ஆக விடாமல் தடுத்தார் என கூறியது போன்றதொரு முட்டாள்த்தனமான கருத்தையே விக்னேஸ்வரனும் கூறியுள்ளார்.
பொதுவாக முஸ்லிம் பெயரில் வெளிநாட்டு வேலைக்கு போவதில் பல சலுகைகள் கிடைக்கும் என்பதால் சில தமிழ் பெண்கள் தங்களை முஸ்லிம் என மாற்றி பாஸ்போட் எடுத்துச்செல்வதை பரவலாக காண்கிறோம். இவர்கள் காசுக்காக உடலை விற்கும் விபச்சாரிகள் போன்று வெளிநாட்டு வேலைக்கு ஆசைப்பட்டு போலி முஸ்லிம் பெயரில் செல்வது அனைவரும் அறிந்த விடயம். நாட்டுக்கு வந்ததும் மீண்டும் அவர்கள் இந்துக்களாகி விடுகின்றனர். மாறாக வெளிநாடு செல்வது என்ற காரணம் இன்றி தமிழ் பெண்கள் இஸ்லாத்துக்கு வரும் எண்ணிக்கை மிக மிக குறைவு. உதாரணமாக கடந்த பத்து ஆண்டுகளை எடுத்து ஆராய்ந்தாலும் இது நூறை தாண்டுவதும் கஷ்டம்.
விக்னேஸ்வரன் ஒரு முன்னாள் நீதிபதி என்பதால் நீதிவான்கள் எதையும் சரியான தரவுகளுடனும் ஆதாரத்துடனுமே பேச வேண்டும் என்பதால் முஸ்லிம் கிராமமாக மாறியுள்ள தமிழ் கிராமங்களின் பெயர் பட்டியலை இவர் வெளியிட முடியுமா என்றும் வெளிநாட்டுக்கு போகும் காரணம் இன்றி இஸ்லாத்துக்கு மாற்றப்பட்ட ஒன்பதினாயிரம் தமிழ் பெண்களின் பெயர், அடையாள அட்டை, முகவரியை வெளியிட முடியுமா என்றும் நாம் சவால் விடுக்கிறோம்.
1000 பேரின் பட்டியல் போதும்.10கிராமத்தின் பெயர்களுமஃ
ReplyDeleteஅப்படி பெரிசா ஐயாக்கிட்ட சவால் விடத் தேவையில்லை. ஆகக்குறைந்தது பத்துப் பத்துப் பேர் கொண்ட பட்டியலைத் தந்தாலே போதும். ஹசரத் இதுக்கு எங்களைப் போன்ற கற்றுக்குட்டிகள் பதில் எழுதினால் கோணல் மானலா போயிடும். இன்னும் அதிகமாக விளாசியிருக்க வேண்டும். சம்பந்தர் சேர் ரொம்ப வெள்ளைமனம் கொண்டவர்கள்;. இப்படி அவங்க பேசுறதுக்கு இவங்களும் காரணமாகிட்டாங்க. பரவாயில்லை.
ReplyDeleteதனது சொந்த பிள்ளைகளையே சிங்களவர்கலை திருமணம் முடித்து மதமும் மாறிவிட்ட நிலையில் இவர் போய் இப்படி பேசுவதர்கு தகுதி இல்லாதவர்.இந்த வயதிலும் வாக்கு பிச்சைக்காக இனவாதம் பேசும் ஒரு இனவாதி.
ReplyDelete