தற்போதுள்ள அரசாங்கத்தை வீழ்த்துவது, எம் அனைவரதும் பொறுப்பாகும் - மஹிந்த
சிறுபான்மையினரின் வாக்குகள் தேவையில்லை என்று பொதுஜன முன்னணி கூறியதாக பொய் பிரசாரங்களை ஐக்கிய தேசியக்கட்சி முன்னெடுக்கின்றது. அவ்வாறு வாக்குகள் வேண்டாமென்று கூறும் அரசியல்வாதிகள் இருப்பார்களா என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்தோடு சுகவீனமுற்ற பிள்ளையை பார்க்கச் சென்ற தந்தையை சுட்டுக் கொல்வது தான் இராணுவம் பொது மக்களை பாதுகாக்கும் முறையா? நாட்டில் இது போன்ற சம்பவங்கள் இடம்பெறும் போது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூற முடியாது என்றும் அவர் விசனம் தெரிவித்துள்ளார்.
நுகேகொடை - கோட்டே வீதியில் புத்திஜீவிகள் சங்கத்தின் தொழிற்சங்க தலைமைக் காரியாலயத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.mமேலும் தெரிவிக்கையில்,
தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு சிறுபான்மையினரின் வாக்குகள் தேவையில்லை என்று பொதுஜன முன்னணி கூறியதாக ஏனைய கட்சிகள் மக்கள் மத்தியில் பொய் பிரசாரங்களை செய்து கொண்டிருக்கின்றன. பொதுஜன முன்னணி மாத்திரமல்ல எந்த கட்சியாக இருந்தாலும் வாக்குகள் தேவையில்லை என்று கூற முடியாது. கூறியதும் இல்லை. அரசியல் கட்சியொன் றுக்கு அனைத்து இன, மதங்களினதும் ஆதரவும் அத்தியாவசியமானதாகும்.
நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி நினைக்கும் போது பயமாக இருக்கிறது. பொருளாதாரம் மற்றும் ஏனைய பிரச்சினைகளைப் பார்க்கும் போது 4 வருட காலத்திற்குள் இவ்வாறு நாட்டை சீரழிக்க முடியுமா என்று ஆச்சரியமாக இருக்கிறது. இதற்கு முன்னர் இது போன்று பிரச்சினைகள் ஏற்பட்டதில்லை. அவ்வாறு சில பிரச்சினைகள் ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் அரசாங்கம் அவற்றுக்கு முகங்கொடுத்தது. ஆனால் தற்போதைய அரசாங்கம் பிரச்சினைகளை தீர்ப்பதாகக் கூறி ஒவ்வொரு நாளும் வெவ்வேறு பிரச்சினைகளை தோற்றுவிக்கின்றது.
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததன் பின்னர் அபிவிருத்திகளை இலக்காகக் கொண்டு செயற்பட்டோம். அதன்போது 30 வருட கால யுத்தத்தினால் எவ்வித அபிவிருத்தியும் இன்றி காணப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. அதற்கிணங்க அப்பிரதேசங்களில் அதிகளவு அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. எனினும் அடுத்த தேர்தலில் நாம் தோல்வியடைந்தோம். ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசாரங்களும், வெளிநாட்டு அழுத்தங்களும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தின.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்கள் என்னை சந்தித்து சோபா மற்றும் ஏனைய ஒப்பந்தங்கள் குறித்து எமக்கு தெளிவுபடுத்தினார்கள். இதன்போது நாட்டில் நில உரிமை, உள்நாட்டு விவகாரங்களில் சர்வதேசத்தின் தலையீடு, அதனால் இலங்கைக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. உள்நாட்டு விவகாரங்களில் இன்றும் சர்வதேச தலையீடுகள் காணப்படுகின்றன. அதாவது பாராளுமன்றத்தில் வெளிநாட்டு சம்பளத்தைப் பெறும் அதிகாரிகள் இருக்கின்றார்கள்.
இலங்கை வரலாற்றில் பாராளுமன்ற சேவையாளர்கள் அல்லது அதிகாரிகளுக்கு நாட்டு நிதியிலிருந்து தான் சம்பளம் வழங்கப்பட்டது. வெளிநாட்டு சம்பளத்தைப் பெறும் அதிகாரிகள் எதற்காக பாராளுமன்ற கடமைக்கு நியமிக்கப்படுகிறார்கள். தேர்தல்கள் ஆணைக்குழுவிலும் இது போன்ற அதிகாரிகள் இருக்கின்றனர். இதில் பல ஊழல்கள் காணப்படுகின்றன.
இவற்றின் மூலம் தான் சர்வதேச அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. எனவே நாட்டிலுள்ள புத்திஜீவிகள் நாட்டை நேசிக்கும் அனைவரும் இதற்கு எதிராக போராட வேண்டும். அடுத்து ஆட்சிக்கு வரும் அரசாங்கம் மக்களுக்கு பொறுப்பு கூறுவதாகவும், நாட்டுக்கு பொறுப்பு கூறுவதாகவும் இருக்க வேண்டும். அவ்வாறானதொரு அரசாங்கத்தை தெரிவு செய்வதற்கு தற்போதுள்ள அரசாங்கத்தை வீழ்த்து வது எம் அனைவரதும் பொறுப்பாகும் என்றார்.
நாட்டை ஆட்சி செய்த ஒரு தலைவரின் கருத்தை படிக்கும் போது வேடிக்கையாக இருக்கின்றது....எதுவும் தெரியாமல் இருக்கும் அப்பாவிகளை ஏமாற்றலாம் என நினைப்பது முட்டாள்தனம்......இது ஒரு உதாரணத்துக்கு....
ReplyDeleteEnna sir neenga...antha 30 waruda youttha wetriyya utta wera tall illiya???
ReplyDeleteSirupaanmay waaku illama wellanumduthaan unga sahaakkalin aasay...wimal mallida speach kettathillayya...awarum...gammam billawom pothum ungada votes top.ku wara...2 dog ayyum thookki potta konjam sirupaanmay ettipparkkum....