Header Ads



வெளிநாட்டு குப்பைகளுக்கு எதிராக, கொழும்பில் ஆர்ப்பாட்டம்


(ஆர்.விதுஷா)

வெளிநாட்டுக் கழிவுப்பொருட்கள் கப்பலில் நாட்டுக்குள்  கொண்டுவரப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து 'மாற்றத்திற்கான இளைஞர்கள்'  அமைப்பினால் ஏற்பாடு  செய்யப்பட்ட  ஆர்ப்பாட்டம் இன்று கொழும்பு புறக்கோட்டை அரசமரத்தடியில்  இடம்பெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் 100 இற்கும் அதிகமானோர்  கலந்துகொண்டு  கொண்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

முதலாளிகளுக்கு இலாபம், குப்பைகள் எமக்கு, அருவக்காடு,  முத்துராஜவெல மற்றும் கரதியான  குப்பைகள்  வேண்டாம்.  ,  குப்பை வியாபாரத்திற்கு எதிராக அணிதிரள்வோம் என்ற  சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திய வண்ணம்  தமது  எதிர்பினை வெளிப்படுத்தினர்.

No comments

Powered by Blogger.