Header Ads



அனைத்து விதமான மிருக பலிகளையும், உடனடியாக தடை செய்ய வேண்டும் - ஓமல்பே சோபித

அனைத்து விதமான மிருக பலிகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முன்னாள் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

மதத்தின் பெயரினால் மேற்கொள்ளப்படும் அனைத்து விதமான மிருக பலி பூஜைகளும் தடை செய்யப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்றுய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

உலகம் மனிதர்களுக்கு மட்டுமானது என சிலர் பிழையாக புரிந்து கொண்டுள்ளனர். மிருகங்கள் பலியிடப்படுவதனை எதிர்க்க வேண்டும். அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.

வட மாகாணத்தில் மிருக பலி பூஜைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் நீக்கியமை அதிருப்தி அளிக்கின்றது.

மிருகங்களை எவ்வாறு நடத்துகின்றார்கள் என்பதனை அடிப்படையாக கொண்டே அந்த சமூகம் மதிக்கப்படும் என மஹாத்மா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும் இந்துக்கள் மிருகங்களை கொலை செய்கின்றனர். பெரஹராக்களில் யானைகளை பயன்படுத்துவதும் ஓர் வகையிலான மிருக துன்புறுத்தலேயாகும்.

மிருகங்களை பாதுகாக்கும் வகையில் நாடாளுமன்றில் சட்டமொன்று கொண்டு வரப்பட வேண்டுமென சோபித தேரர் கோரியுள்ளார்.

15 comments:

  1. நீ சொன்னால் சரி

    ReplyDelete
  2. Please go ahead and stop fishing as well

    ReplyDelete
  3. நாட்டின் சட்டம் இப்போது உங்கள்கலின் கைகளில்,பேசாமல் தேர்தல்கள் நடத்தாமல் நாட்டின் அனைத்து நிருவாகத்த்சியும் கெட்டு வாங்கலாமே

    ReplyDelete
  4. ANEI POW POW. MASMAALU
    EHEMA KANNE NEDDA

    ReplyDelete
  5. அல்ஹம்துலில்லாஹ் அப்படியே யானைகள் காட்டில் கொண்டு பொய் விடவேன்டியடுதான்

    ReplyDelete
  6. அப்படியானால் மிருகக்காட்சிசாலைகளில் உள்ள மிருகங்களுக்கு மஞ்சல் துவேசங்களைத்தான் அறுத்துச் சாப்பாடு போட வேண்டும். அதற்கு அனுமதியளிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டால் இந்நாடு சுமுகமாக முன்னேறும்.

    ReplyDelete
  7. Pls return the Chinese money first.

    ReplyDelete
  8. ஒரு பூனையை கயிற்றில் கட்டி வைத்துக் கொண்டு அந்தப் பூனையின் உரிமையை அதற்குக் கொடுக்காமல் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்த ஒரு இஸ்லாமியப் பெண்ணை அவள் நரகவாதி என்று கூறி, சுமார் 2000 வருடங்களுக்கு முன் ஒரு பூனைக்கும் உரிமையை பெற்றுக் கொடுத்த மார்க்கம் என்றால் அது இஸ்லாமிய மார்க்கம் மட்டும்தான்.
    அதே நேரம் பசியால் வாடிக் கொண்டிருந்த ஒரு நாய்க்கு தண்ணீர் புகட்டிய ஒரு விபச்சாரப் பெண்ணுக்கு சுவர்க்கம் என்று கூறி இந்த மிருகங்களின் உரிமையையும் உலகுக்கு பறை சாட்டிய மார்க்கம் என்றால் அதுவும் இஸ்லாமிய மார்க்கம் மட்டும்தான்.
    மேலும், ஒட்டகத்தை பிரயாண வாகனமாகப் பயன்படுத்தும் போது அதில் அதிக நேரம் அமர்ந்து, நின்று கொண்டு இருவர் பேசிக் கொண்டிருப்பதைக் கூட தடை செய்து ஒட்டகத்திற்கும் உரிமையைப் பெற்றுக் கொடுத்த மார்க்கம் என்றால் அதுவும் இஸ்லாமிய மார்க்கம் மட்டும்தான்.
    அதுமட்டுமல்ல, வயதான கிழட்டு மாடுகளை பொதிகளை சுமக்க பயன்படுத்த வேண்டாம் என்றும் வயல் நிலங்களை உழவ பயன்படுத்த வேண்டாம் என்றும் மாடுகளின் உரிமையையும் பெற்றுக் கொடுத்த மார்க்கம் என்றால் அதுவும் இஸ்லாமிய மார்க்கம் மட்டும்தான்.
    அத்தோடு, காலை நேரங்களில் அதிக சத்தத்துடன் கூவி மனிதர்களை தூக்கத்திலிருந்து எழுப்பும் சேவல்களை திட்டாதீர்கள் என்று கூறி கோழிகளின் உரிமையையும் பெற்றுக் கொடுத்த மார்க்கம் என்றால் அதுவும் இஸ்லாமிய மார்க்கம் மட்டும்தான்.
    அத்தோடு மட்டும் நின்று விடாமல், ஒரு மிருகத்தை அறுத்து பலியிடும் போது அதனை அறுக்கும் முன் அதற்கு தண்ணீர் புகட்ட வேண்டும் என்றும், அது அறுக்கப்பட்ட பின் அதன் உயிர் பிரியும் வரை துடிப்பதற்கு போதுமான அளவு இடத்தையும் கொடுக்க வேண்டும் என்றும், ஒரு மிருகத்தை இன்னொரு மிருகத்தின் முன்னிலையில் அறுப்பதன் மூலம் அதற்கு இரண்டு மரணங்களைக் கொடுக்க வேண்டாம் என்றும் ஒரு அழகான அறுத்தல் முறையைக் கற்றுக் கொடுத்த மார்க்கம் என்றால் அதுவும் இஸ்லாமிய மார்க்கம் மட்டும்தான்.
    ஆக, இவ்வுலகில் மிருகங்களின் உரிமையைப் பெற்றுக் கொடுத்த முதல் மார்க்கம் என்றால் அது இஸ்லாமிய மார்க்கம் என்றால் மிகையாகாது.
    ஆகவே, இலங்கையில் எல்லாப் பிரச்சினைகளும் சுமூகமாகிக் கொண்டிருக்கும் இந்நிலையில் ஒரு புதிய பிரச்சினையை உண்டு பண்ண நினைக்கும் “ஓமல்பே சோபித” தேரர் தான் வெளியிட்ட கருத்துக்களை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற அன்பான வேண்டு கோளை, நாட்டின் ஒற்றுமையையும், சமூகங்களுக்கிடையேயான ஒற்றுமையையும் விரும்பும் “பல்லின மக்கள்”

    ReplyDelete
  9. உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வியல், பொருளியல் சுதந்திரம் இருப்பதுபோல் பேச்சுச் சுதந்திரமும் இருக்க வேண்டும். கற்றோர் கல்லாதோருக்கு முன்மாதிரியாக இருத்தல் வேண்டும். பணமுடையோர் வறியவர்களுக்கு முன்மாதிரியாக இருத்தல் வேண்டும். அதுபோல் மதகுருமார் உலகம் முழுவதற்குமே முன்மாதிரியாக நல்வழிகாட்டிகளாக இருத்தல் வேண்டும். ஒருவருடைய மதக் கொள்கைகளையும் அனுஷ்டானங்களையும் நம்பிக்கைகளையும் இன்னொருவர்மீது திணிக்கக்கூடாது. இலங்கை பல்லினத்தவர் வாழும் நாடு. அவரவர் தம்முடைய மதவிழுமியங்களை மிகவும் சுதந்திரமாகப் பின்பற்ற மற்றவர்கள் ஒத்துழைப்பு நல்குதல் வேண்டும். ஒவ்வோர் இனத்திற்கும் தனித்துவமான கொள்கைகள் புரிதல்கள் உண்டு என்பதனை எல்வோரும் புரிந்து கொள்ளல் வேண்டும். நாங்கள் ஒருவருக்கு அறிவுரை ஒன்றினைப் பகர முன்னர் அது எல்லோராலும் ஏற்க்கொள்ளப்படுமா என்பதனையும் ஆழமாகக் கவனித்துக் கொள்ளல் வேண்டும். 1982ல் 25 ரூபாவாக இருந்த ஒரு US டொலர் இன்ற 180- ரூபாவாகவும் 1953ல் 0.75 ரூபாவாக இருந்த சவூதி ரியால் இன் மதிப்பு ரூபா 48 ஆகவும் உயரக் காரணம் இலங்கை மக்கள் நாட்டின் இயற்கைவள அபிவிருத்தியில் நாட்டம் காட்டாது இனவாதம் தீவிரவாதம் போன்ற பல்வகை வாதங்களை அபிவிருத்தி செய்ய தீவிர முனைப்புக் காட்டுவதேயாகும்.

    ReplyDelete
  10. மிருகம் என்றால் எல்லா உயிரினங்களும் அடங்கும். மீன் பிடிப்பதும், கோழி சாப்பிடுவதும் நிறுத்தப்பட வேண்டும். எனவே மீனவர்கள் தனது தொழிலை மாற்ற வேண்டும். மீன் பிடிகைத்தொழில் சம்பந்தமான அமைச்சு ஒன்று தேவை இல்லை. கோழி வளர்ப்பு கைத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும் தம் தொழில்களை மாற்ற வேண்டியதுதான். இவை இரண்டையும் செய்து காட்டுங்கள்.
    மக்கள் பட்டினியால் வாடி சாகவேண்டியதுதான். பன்சலையில் பார்க்கும் வேலையை மட்டும் செய்யாமல் கண்ட கண்டவர்களெல்லாம் கருத்துத்தெறிவித்தால் நாடு உருப்பட்ட மாதிரிதான். இந்த நாடு உருப்பட வேண்டும் என்றால் இந்த தேரர் களுக்கு ஒரு கட்டுபாட்டு விதிக்க வேண்டும்.

    ReplyDelete
  11. Are your Buddhist?. Better you study again real Buddhism.
    You crazy month. Don't judge the world with your Expired Buddhist Philosophy. Philosophy(Man Made) is different than the GOD's religions. Mind it you Monk.

    ReplyDelete
  12. Are your Buddhist?. Better you study again real Buddhism.
    You crazy month. Don't judge the world with your Expired Buddhist Philosophy. Philosophy(Man Made) is different than the GOD's religions. Mind it you Monk.

    ReplyDelete
  13. You r correct.
    Go ahead and stop all meat stalls.
    Stop qurban . Let all the animals free from the cages from the zoo. Stop slaughtering hens.stop spraying pesticide in agriculture. Keep the prison open n free them.
    YOU WILL SEE A GOOD ENVIRONMENT AROUND US.
    DO IT AT LEAST FOR 2 N SEE THE DIFFERENCE.
    IT'S GOOD

    ReplyDelete
  14. yes very good
    stop beef , mutton and chicken too

    ReplyDelete
  15. Ur people are Buddhist and have a culture but don't try to put ur nose of other. Pls tell me y the human has hunting teeth.

    ReplyDelete

Powered by Blogger.