Header Ads



தேசிய ஒற்றுமையினூடாகவே தேசிய, பாதுகாப்பை வலுப்படுத்த முடியும் - சஜித்

வெரும் இராணுவ பலத்தினால் மாத்திரம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த அமைச்சர் சஜித் பிரேமதாஸ, இராணுவ பாதுகாப்புக்கு மேலாக பொருளாதாத்தின் உறுதிப்பாடும் தேசிய ஒற்றுமையினூடாகவே தேசிய பாதுகாப்பை வலுப்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டார்.

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் 30 வருட அரசியல் வாழ்க்கை கௌரவிக்கும் வகையில் 'மங்களவின் அரசியல் பயணம்' நிகழ்வு  நேற்று மாத்தறை பிரதேசத்தில் ஏற்பாடு இடம்பெற்றது.  

இந்த நிகழ்வில் அமைச்சர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட நிதி அமைச்சர் மங்கள சமரவீர, எதிர் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன்  உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் கலந்துக்கொண்டிருந்தனர். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

எமது தேசிய வருமானத்தில் 54 வீதமானவை செல்வந்தர் வர்க்கம் அனபவிக்கதானவும்  அடிமட்ட மக்களுக்கு பொருளாதார சலுகைகள் முழுமையாக சென்றடைவதில்லை என்று குறிப்பிட்ட அமைச்சர் பிரேமதாச அனைவருக்கும் சமமானதும் சகல மக்களுக்கும் சென்றடைய கூடியதுமான எமது தனித்துவத்துக்கு ஏற்றது போன்ற பொருளாதார கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

No comments

Powered by Blogger.