இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் பேசுபவர்கள், முதலில் தமது கைகளை சுத்தப்படுத்த வேண்டும்
ஞானசாரதேரர் சிங்கள பெளத்த இனவாதி. அப்படியானவர் இஸ்லாமிய அடிப்படைவாதம், மதவாதம் தொடர்பில் பேசுவதற்கு முன்னர் அவரின் கைகளை சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டுமென ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
சோசலிச மக்கள் முன்னணி கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
இஸ்லாமிய அடிப்படைவாதம், மதவாதத்தை கட்டுப்படுத்த வேண்டுமென்பது அனைவரதும் கோரிக்கையாகும். என்றாலும் இஸ்லாமிய அடிப்படைவாதம், இனவாதம் தொடர்பில் பகிரங்கமாகப் பேச முன்வருபவர்கள் ஆரம்பமாக அவர்களின் கைகளை சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். ஞானசார தேரர் ஒரு சிங்கள பெளத்த இனவாதி என்பது யாரும் அறிந்தவிடயம்.
அத்துடன் இனவாதிகள் என்போர் தனது இனத்தைவிட மற்ற இனம் கீழானது என எண்ணுபவர்களாவர். அல்லது ஓர் இனத்தின் உரிமை மற்ற இனத்தின் உரிமையைவிட உயர்ந்த நிலையில் இருக்கவேண்டும் என நினைப்பவர்களாவர். அதனால் இஸ்லாமிய இனவாதத்துக்கு மாத்திரமல்ல சிங்கள, தமிழ் இனவாதத்துக்கு எதிராக நாங்கள் செயற்படவேண்டும். அவ்வாறு செயற்படுபவர்கள் சகல இனங்களின் உரிமைகள் தொடர்பில் நடுநிலையாக செயற்படக்கூடியவர்களாக இருக்கவேண்டும்.
ஆனால், தற்போது ஞானசார தேரர் முஸ்லிம் அடிப்படைவாதம், இனவாதம் தொடர்பில் கதைத்து வருகின்றார். அடிப்படைவாதம், இனவாதம் எந்த மதத்திலிருந்தாலும் அதனை கட்டுப்படுத்தவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அடிப்படைவாத நடவடிக்கைகள் எல்லை மீறும்போதுதான் பயங்கரவாத நடவடிக்கைகளுக்குத் தள்ளப்படுகின்றது.
ஆனால், ஞானசார தேரரின் கடந்தகால நடவடிக்கைகள் சிங்கள அடிப்படைவாதம் அல்லது இனவாதத்தை தூண்டும் வகையிலே இருந்துவந்துள்ளன. அப்படியானவருக்கு இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிராக செயற்படத் தகுதி இருக்கின்றதா என்பதே எமது கேள்வியாகும். அதனால் ஞானசார தேரர் ஆரம்பமாக தன்னை சுத்தப்படுத்திக்கொள்ளவேண்டும் என்றார்.
எம்.ஆர்.எம்.வஸீம்
எது எப்படியிருந்தபோதிலும் இனவாதம், மதவாதம், அடிப்படைவாதம் ஆகியவற்றிற்கும்; பொதுவான மனித வாழ்வு நெறிகளுக்குமிடையில் எந்தத் தொடர்பும் இல்லை. அவரவரது மதசம்பந்தமான விடயங்களை அவரவர்கள் தேவையானபோது அரசின் ஒத்துழைப்புடன் கவனித்துக் கொள்ளும்போது என்ன பிரச்சினை வந்துவிடப் போகின்றது. ஞானசாரர் அத்துரலிய போன்றோர் தமது சமய கலாசார விடயங்களுக்கு முக்கியம், முன்னுரிமை அளித்து மக்களை சீரிய குணங்களும் வாழ்க்கை நெறிகளும் உடையவர்களாக மாற்ற உதவி செய்தல் மிக முக்கியமானது. மத குருமார்களின் ஆகக்கூடிய பணி அதுவாகத்தான் இருக்க முடியும். மக்களுக்கு மத்தியில் விதண்டாவாதம் பேசிக்கொண்டு திரிவதையும் ரௌடித்தனம் காட்டுவதையும் சமூகங்களின் சௌஜன்னிய வாழ்க்கையினை சீர்குலைக்கக்கூடிய கட்டமைப்பினுள் இவர்கள் தொடர்ந்து இருப்பதையும் கைவிட வேண்டும். இச் செயற்பாடுகள் நம் நாடு பொருளாதாரத்தை மட்டுமல்ல சர்வதேச அரங்கில் எமக்கு இருக்கக்கூடிய நற்பெயருக்கு அபகீர்த்தியையும் ஏற்படுத்தக்கூடியது மாத்திரமன்றி சர்வதேச நாடுகள் மூலம் கிடைக்கக்கூடிய பொருளாதார நலன்களையும் இழக்கக்கூடிய தன்மையையும் ஏற்படுத்தும். இவர்களைப் போன்றவர்களுக்கு workshop, Refresher course, Field work போன்ற திட்டமிட்ட பயிற்சி நெறிகளை வழங்கி சமூகமயப்படுத்தல் மிக முக்கியமானதாகும்.
ReplyDeleteExcellent speech
ReplyDeleteமிகவும் தந்திரமான பேச்சு. வாசுதேவ பெளத்த இனவாதத்தை எதிர்க்கிறார். இப்படி ஒரு நியாயமான மனிதனே “இஸ்லாமிய அடிப்படைவாதம் மதவாதத்தை கட்டுப்படுத்த வேண்டுமென்பது அனைவரதும் கோரிக்கையாகும்” என்கிறார் என நாட்டுமக்களையும் உலகத்தை கவனிக்க வைக்கும் பேச்சு. செய்யவேணும் ஆனா வினை சுத்தமா செய்ய வேணும் என்பதுதான் அவரது பேச்சின் அடிப்படை. இது போர் முடிந்த கையோடு மகிந்த தரப்பு உருவாக்கிய நிகழ்ச்சி நிரலாகும்.
ReplyDelete