Header Ads



ரணிலின் ஆசீர்வாதத்துடன் ஜனாதிபதி, வேட்பாளராக சஜித்தை களமிறக்க வேண்டும் - மங்கள கோரிக்கை


ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய என கட்சியின் அனைத்து உறுப்பினர்களின் ஆசீர்வாதத்துடன் சஜித்தை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என முன்மொழிவதாக” அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பான இழுபறி தொடர்ந்தும் இடம்பெற்றுவரும் நிலையில், அமைச்சர் மங்கள சமரவீரவிடம் இது தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

ஐக்கிய தேசிய கட்சியினால் வேட்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டும். குறித்த வேட்பாளர் வெற்றிபெறுபவராக இருத்தல் வேண்டும் என்ற கருத்துக்கள் கட்சிக்குள் காணப்படுகின்றன. கட்சியினுள் அத்தகைய அம்சங்களை கொண்ட ஒரே நபராக சஜித் பிரேமதாச காணப்படுகின்றார்.

அவரை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய என கட்சியின் அனைத்து உறுப்பினர்களின் ஆசீர்வாதத்துடன் சஜித்தை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என முன்மொழிவதாக குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.