முஸ்லிம் திருமண வயது 18 ஆகிறது, பெண்களும் காதி நீதிபதியாகலம், மத்தாஹ் பெற நடவடிக்கை
முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லையை 18 ஆக அதிகரிப்பதற்கும், முஸ்லிம் பெண்களை காதி நீதிபதிகளாக நியமிப்பதற்கும், விவாகரத்து வழக்குகளில் பாதிக்கப்படும் பெண்களுக்கு மத்தாஹ் (நஷ்டஈடு) பெற்றுக் கொடுப்பதற்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று தங்களது ஏகமனதான செய்து கொண்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் முன்னைய அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்றுக் கொள்வதாக நேற்றுத் தீர்மானித்தனர்.
தங்களது முன்னைய அமைச்சுப் பொறுப்புகளை மீண்டும் ஏற்றுக் கொள்வதா? இல்லையா? என்று அவர்கள் நேற்று மாலை பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் ஒன்றுகூடி ஆராய்ந்தனர். நிலைமை ஓரளவு சீரடைந்துள்ளமையைக் கருத்திற் கொண்டும் சமூகத்தின் நலன் கருதியும் மீண்டும் அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதாகத் தீர்மானித்தனர்.
இக்கலந்துரையாடலில் அமைச்சர் கபீர் ஹாஷிமைத் தவிர ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீமும் கலந்து கொண்டிருந்தார்.
ஜனாதிபதி தனிப்பட்ட வெளிநாட்டு விஜயமொன்றினை மேற்கொண்டிருப்பதால் அவர் நாடு திரும்பியதும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து முன்னைய அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றுக் கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் 3 ஆம் திகதி 4 அமைச்சர்களும் 4 இராஜாங்க அமைச்சர்களும் ஒரு பிரதியமைச்சருமாக 9 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்தனர்.
அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், கபீர் ஹாஷிம், எம்.எச்.ஏ.ஹலீம், ரிசாத் பதியுதீன், இராஜாங்க அமைச்சர்களான பைசல் காசிம், எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, அலிசாஹிர் மௌலானா, பிரதியமைச்சரான அப்துல்லாஹ் மஹ்ரூப் ஆகியோரே தங்களது பதவிகளைத் துறந்தவர்களாவர்.
இவர்களில் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசிம் மற்றும் எம்.எச்.ஏ.ஹலீம் ஆகிய இருவரும் அண்மையில் கட்சித் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வேண்டுகோளுக்கிணங்க அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி தலைமையில் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
vidivelli
AMAICHU PAZAWIHALUKKU NEER
ReplyDeleteWADIKKURA UNGALUKKU, MUSLIM
SHATTAM PATRI ENNA THERIUM.
RANILIN VENDUHOLUKKU ISLATHAI
KOCHAI PADUTHUHIREERHALA.
ORUNAAL MARANAM VARUM. KAVANAM
திருமணத்தில் ஆரம்பித்து பதவி பெறுவதுல முடிகிறது செய்தி. அப்போ செய்தியின் படி இவர்கள் பதவி துறந்து திருமணப் பிரச்சினை காரணமாகவா?
ReplyDeleteவரலாற்றுத்தவறு ஒன்றை செய்ய எத்தனிக்கின்றார்கள்.
ReplyDeleteஅல்லாஹ்வை பயந்துகொள்ளுங்கள்.நீங்கள் யாரை திருப்திப்படுத்த இந்த முடிவை எடுத்துள்ளீர் என்பதை ஒரு கணம் சிந்தியுங்கள்.
வரவேற்க தக்க விடயம்.பெண்களுக்கு கல்வி மிக மிக அவசியம்.எனவே 18 வயது என்பதும்,பெண் காதி நீதிபதிகளும்,பெண்களுக்கு கனவனினால் விவாகரத்து செய்யப்படும் போது அந்த பெண்ணுக்கும்,அவளின் பிள்ளைகலுக்கும் வாழ்வாதார பணமும் மிக அவசியம்.இது ஏற்றுகொல்லக்கூடிய ஒரு சட்டம்.
ReplyDeleteYes, it's a good decision about age limit, we are muslims not going to effect on it, when we cheked previous datas analysis we very small number of people only has got married below 18 years old.
ReplyDeleteOther then that the lady judges of (Kaadhi) is not excepted, better to make a group of judges more then Two and include one lady , who can advice and involved in judgment. I hope this will work.