Header Ads



தனிநபர் ஒருவர் வருடாந்தம் 169 கிலோ அரிசியையும் 132 கிலோ மரக்கறியையும் நுகர்கிறார்

இலங்கையில் வருடாந்தம் தனிநபரொருவரின் அரிசி நுகர்வானது 169 கிலோகிராம் என புதிய ஆய்வுகள் மூலம் வெளியாகியுள்ளது.

2013ஆம் ஆண்டு தொடக்கம் 2017ஆம் ஆண்டு வரையான தரவை அடிப்படையாகக் கொண்டு, இந்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதென, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேப்போல், இலங்கையின் வருடாந்த தனிநபர் மரக்கறி நுகர்வானது 132 கிலோகிராம் என்றும்  பழங்களின் நுகர்வு 42 கிலோகிராம் என்றும் ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

No comments

Powered by Blogger.