Header Ads



இங்கிலாந்துக்கு 1 ஓட்டம் தவறாக வழங்கப்பட்டது என்கிறார் நடுவர், நாங்களே சம்பியன் என்கிறது இங்கிலாந்து

நியூ­ஸி­லாந்து அணி­யு­ட­னான உலகக் கிண்ண இறு­திப்­போட்­டியில் இங்­கி­லாந்­து­அ­ணிக்கு கடைசி ஓவரில் தவ­று­த­லாக ஓர் ஓட்டம் மேல­தி­க­மாக வழங்­கப்­பட்­டுள்­ளது என அவுஸ்­தி­ரே­லிய நடுவர் சிமோன் டஃபெல் கூறி­யுள்ளார்.

242 ஓட்­டங்கள் எனும் இலக்கை நோக்கி இங்­கி­லாந்து அணி துடுப்­பெ­டுத்­தா­டிய போது 50 ஆவது ஓவரின் 4 ஆவது பந்தில் பென் ஸ்டோக்ஸ் இரண்டு ஓட்­டங்­களை பெற முற்­பட்டார். 

அவர் இரண்­டா­வது ஓட்­டத்­துக்­காக ஓடும் போது, நியூ­ஸி­லாந்து அணியின் மார்டின் கப்டில், பந்தை விக்கெட் காப்­பா­ள­ரிடம் எறிந்தார். கப்டில் எறிந்த பந்து கிறீ­ஸுக்குள் நுழை­வ­தற்­காக பாய்ந்த ஸ்டோக்ஸின் துடுப்பில் பட்டு, பவுண்ட்­றிக்குச் சென்­றது.

இதனால் இங்­கி­லாந்து அணி வீரர்கள் ஓடிய 2 ஓட்­டங்கள் மற்றும் பந்து பவுண்­ட­றிக்குச்  சென்­ற­மைக்­காக 4 ஓட்­டங்கள் என மொத்தம் 6 ஓட்­டங்கள் வழங்­கப்­பட்­டன.

நடு­வரின் இந்த முடிவு ஆட்­டத்தின் தலை­வி­தி­யையே மாற்­றி­யது. இங்­கி­லாந்து அணி 241 ஓட்­டங்­களைப் பெற்று, ஓட்ட எண்­ணிக்­கையில் சம­நி­லையில் முடிந்­தது. அதன்பின் சுப்பர் ஓவரும் சம­நி­லையில் முடி­வ­டைய, அதிக பவுண்­ட­றி­களின் அடிப்­ப­டையில் இறுதிப் போட்­டியை வென்று உலக சம்­பியன் ஆகி­யது இங்­கி­லாந்து,

ஆனால் ஐ.சி.சி விதி­மு­றை­யின்­படி இது­போல ஆறு ஓட்­டங்­களை வழங்­கி­யமை தவறு என அவுஸ்­தி­ரே­லி­யாவைச் சேர்ந்த முன்னாள் நடுவர் சிமோன் டஃபெல் தெரி­வித்­துள்ளார்.

இரண்­டா­வது ஓட்­டத்தை எடுக்­கும்­போ­துதான் அது ஓவர் த்ரோவாக மாறி­யது. கப்டில் பந்தை விக்கெட் காப்­பா­ளரை நோக்கி எறியத் தொடங்­கிய போது இரண்டு துடுப்­பாட்ட வீரர்­களும் இரண்­டா­வது ஓட்­டத்­துக்­காக ஓட ஆரம்­பித்­தி­ருந்­தனர்.

ஆனால், ஒரு­வரை ஒருவர் கடக்­க­வில்லை. எனவே 2 ஓட்­டத்தை  நடு­வர்கள் கணக்கில் எடுத்துக் கொண்­டி­ருக்­கக்­கூ­டாது. அந்த பந்­து­வீச்­சுக்கு மொத்­த­மாக 5 ஓட்­டங்­களை மாத்­தி­ரமே வழங்­கி­யி­ருக்க வேண்டும். ஆனால் அந்த பந்­து­வீச்­சுக்கு 6 ஓட்­டங்­களை வழங்­கி­யமை ஆட்­டத்தின் பெரிய திருப்­பு­மு­னை­யாக மாறி­விட்­டது.

5 ஓட்­டங்கள் கொடுத்­தி­ருந்தால், அடுத்த பந்தை ஆதில் ரஷிட் எதிர்­கொள்ள நேரிட்­டி­ருக்கும் என சுட்டிக்காட்டப்படுகின்றது. 

இந்நிலையில், 5 ஓட்டங்­க­ளுக்குப் பதி­லாக 6 ஓட்­டங்­களை நடு­வர்கள் வழங்­கி­யமை தெளி­வான தவறு என நடுவர் சைமன் டஃபெல் தெரி­வித்­துள்ளார்.

 இது­தொ­டர்­பாக அவர் மேலும் கூறு­கையில், “அந்தப் பரபரப்­பான கட்­டத்தில் ஃபீல்டர் பந்தை எறிய முயன்­ற ­போது பேட்ஸ்­மேன்கள் ஒரு­வ­ரை­யொ­ருவர் கடந்­தி­ருப்பர்  என நடுவர் நினைத்­தி­ருப்பார்.

‘எனினும் இந்தத் தவறால் தான் நியூ­ஸி­லாந்து தோற்­றது, இங்­கி­லாந்து வென்­றது எனக் கூற முடி­யாது’ என்றும் அவர் கருத்து தெரி­வித்­துள்ளார்.

துர­திஷ்­ட­வ­ச­மாக இவ்­வா­றான தவ­றுகள் அவ்­வப்­போது நடக்­கின்­றன. இது இந்த விளை­யாட்டின் ஒரு பகு­தி­யாக உள்­ளது’ எனவும் சிமோன் டஃபெல் கூறினார்.

இவர் வரு­டத்தின் சிறந்த நடு­வ­ருக்­கான ஐ.சி.சி விருதை  5  தட­வைகள் வென்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

இங்­கி­லாந்து கிரிக்கெட் பணிப்­பாளர் கவலையில்லை

எனினும், இது குறித்து தான் கரி­சனை கொள்­ள­வில்லை என இங்­கி­லாந்து கிரிக்கெட் பயிற்­றுநர் ஆஷ்லி கைல்ஸ் தெரி­வித்­துள்ளார்.  ‘ நாம் உலக சம்­பி­யன்கள், எம்­மிடம் கிண்ணம் இருக்­கி­றது. ஆதை தொடர்ந்தும் தக்­க­வைத்­துக்­கொள்ள விரும்­பு­கிறோம்’ என கைல்ஸ் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Wrong explanation. Overthrow reached the boundary line after the batsmen had crossed the crease for the second run. The ball hit the bat when they had aost taken the 2nd run.

    ReplyDelete

Powered by Blogger.