"ஹக்கீமிடம் விசாரணை, நடத்த வேண்டும்"
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை ஐ.எஸ். அமைப்பு நடத்தவில்லை என முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளமை சம்பந்தமாக பாதுகாப்பு தரப்பினர் அவரிடம் விசாரணைகளை நடத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்திய தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்புக்கு ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு இருந்தமைக்கான தெளிவான சாட்சியங்கள் சர்வதேச ரீதியில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளமைக்கு அமைய தற்போது கூறப்படும் விடயங்களை விட அவருக்கு ஏதோ ஒன்று தெரிந்துள்ளது என்பது எமக்கு தெளிவாகியுள்ளது.
இந்த தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்புக்கு தொடர்பில்லை என்று ஹக்கீம் கூறியதில், அவர் என்ன கருதுகின்றார் என்று எனக்கு தெரியவில்லை. எனினும் பாதுகாப்பு தரப்பினரிடம் அவரிடம் விசாரணை நடத்தி, அது குறித்து அறிந்துக்கொள்வது சிறந்தது எனவும் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்திய தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்புக்கு ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு இருந்தமைக்கான தெளிவான சாட்சியங்கள் சர்வதேச ரீதியில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளமைக்கு அமைய தற்போது கூறப்படும் விடயங்களை விட அவருக்கு ஏதோ ஒன்று தெரிந்துள்ளது என்பது எமக்கு தெளிவாகியுள்ளது.
இந்த தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்புக்கு தொடர்பில்லை என்று ஹக்கீம் கூறியதில், அவர் என்ன கருதுகின்றார் என்று எனக்கு தெரியவில்லை. எனினும் பாதுகாப்பு தரப்பினரிடம் அவரிடம் விசாரணை நடத்தி, அது குறித்து அறிந்துக்கொள்வது சிறந்தது எனவும் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment