Header Ads



நாட்டின் பாதுகாப்பு குறித்து போதியளவு புரிதல் உடைய ஒரே ஆளும் கட்சி Mp பொன்சேகா மட்டுமே - மஹிந்த

நாட்டின் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் போதியளவு தெளிவுடைய ஒரே நபர் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கண்டி கட்டம்பே பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் குறித்து போதியளவு புரிதல் உடைய ஒரே ஆளும் கட்சி உறுப்பினர் சரத் பொன்சேகா மட்டுமேயாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசியப் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமாயின் நாட்டில் ஒழுக்கம் மிகவும் அவசியமானது என தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு ஸ்திரமற்ற நிலையில் காணப்பட்டால் பாரிய பின்விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.

போர் இடம்பெற்ற காலத்திலும் மக்கள் மீது சுமைகளை தாம் திணிக்கவில்லை என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. மக்களின் செல்வாக்கு எந்தப் பக்கம் நாமும் அந்தப்பக்கம் தான் என அரசிய ல் பெல்டியடிக்கின்றார் மஹிந்த, இதுபோன்ற முனாபிக்கான காபிர்களைப்பொறுத்தவரை மக்கள் எந்நப்பக்கம் அதுதான் சத்தியம்,நீதி நியாயம். ஆனால் அதிலும் நச்சூட்டி அவற்றையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துபவன் தான் ஒருஜினல் முனாபிக். அந்தப் பங்கை வெற்றிகரமாக நடிக்கிறான் இந்த மஹிந்த.

    ReplyDelete

Powered by Blogger.