Header Ads



முஸ்லிம் Mp கள் அமைச்சுக்களை மீண்டும், பொறுப்பேற்க வேண்டுமென்ற சந்திப்பில் பிக்குகளினால் குழப்பம்

அரசாங்கத்தில் இருந்து பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களுக்கு தமது அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்குமாறு பௌத்த மகா சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மாவனல்லையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, மேலும் சில பௌத்த பிக்குகள் குறுக்கிட்டு தமது எதிர்ப்புக்களைத் தெரிவித்துள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பிக்குகள், அமைச்சுப் பொறுப்பிலிருந்து விலகிய கபீர் ஹஷீம் மற்றும் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்படாத முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவிகளை மீண்டும் பொறுப்பேற்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளனர்.

1 comment:

  1. யாருக்கும் தேவையில்லை,ஏன் இன்னும் காலில் விழுகிரீர்கல்.வெலினாடுகலின் பிச்சை கிடைக்காமல் போய் விடும் என பயம் போல

    ReplyDelete

Powered by Blogger.