Header Ads



மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில், கண்வைத்த ரணில் - கொள்ளையடிக்க தயாராகிறார்..?

மட்டக்களப்பு பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள தனியார் பல்கலைக்கழகத்தை, பல்கலைக்கழக சட்டத்தின் 70(எப்) சரத்தின் கீழ் அரசாங்கத்துக்கு சுவீகரித்துக் கொள்ள இடம்பாடுகள் உள்ளதா என பரீட்சித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க சட்ட மா அதிபருக்கு இன்று (12) ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல லிவேராவுக்கு எழுத்து மூலம் இந்த அறிவிப்பை விடுக்குமாறு பிரதமரினால் பிரதமரின் செயலாளர் சமன் ஏகநாயக்கவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் பிரதமர் செயலக வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

குறித்த நிறுவனத்தின் உரிமையாளர் தொடர்ந்தும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தது போன்று இனங்களுக்கும், சமயங்களுக்கும் இடையில் அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் சிறு அறிவிப்புக்களை வெளியிட்டு வருவதாயின், பல்கலைக்கழக சட்டத்தின் 70 (எப்) சரத்தின்படி, அந்த உரிமையாளரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்கலைக்கழகத்தை அரசுக்கு சுவீகரித்துக் கொள்ள முடியுமா? என்பதை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாரே பிரதமர் சட்ட மா அதிபரிடம் கோரியுள்ளதாகவும் சகோதர தேசிய ஊடகமொன்று அறிவித்துள்ளது.

- Riyath -

2 comments:

Powered by Blogger.