ஜனாதிபதி மைத்திரிக்கு, ஹிஸ்புல்லாஹ் எழுதிய கடிதம் (தமிழில்)
அதிமேதகு மைத்திரிபால சிறிசேன,
ஜனாதிபதி,
இலங்கை சனநாயக சோசலிச குடியரசு.
அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு,
கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை இராஜினாமா செய்தல்.
2019 ஏப்ரல் 21ம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை முஸ்லிம் உலமாக்கள் மற்றும் முஸ்லிம் சமூகம் கண்டனங்களை பாரிய அளவில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் முஸ்லிம் சமூகத்தை மேலும் அவமானப்படுத்தி மலினப்படுத்தும் வகையில் மிக நுண்ணியமாக திட்டமிடப்படுகின்ற செயற்பாடுகள் மூலம் முஸ்லிம் சமூகத்தை அச்சமான சூழ்நிலைக்கு மூழ்கடிக்கின்ற சூழ்நிலைகளை அவதானிக்க முடிகிறது.
ஆளுநராக நேர்மையாகவும், விசுவாசமாகவும் சகல சமூகங்களினது நலன்களை பேணும் வகையிலும் நாட்டின் நலன் கருதியும் சேவையாற்றினேன்.
எனினும் எனது சமூகம் மிக மோசமாக குறி வைக்கப்படுவதுடன் இனவாத சக்திகள் எவ்வித அடிப்படைகளும் இன்றி நான் இராஜினாமா செய்ய வேண்டும் என கோருகின்றேனர்.
அத்தோடு நான் எனது பதவியை செய்யாவிட்டாலோ அல்லது பதவி நீக்கம் செய்யாவிட்டாலோ எனது முஸ்லிம் சமூகத்தின் உயிர்களையும் உடைமைகளையும் அழித்தொழிப்பதற்க்கான காரணமாக அமைந்து விடக் கூடிய வகையிலான அச்சுறுத்தல்களை அவதானிக்க முடிகிறது.
நான் இராஜினாமா செய்யாவிட்டாலோ அல்லது பதவி நீக்கம் செய்யாவிட்டாலோ எனது சமூகத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட மாட்டாது என்பதும் எனக்கு உணர்த்தப்பட்டது.
எனவே,இவ்வாறானதொரு சூழ் நிலையில் நான் எனது சமூகத்தின் நன்மை கருதி எனது இராஜினாமாவை சமர்ப்பிக்கிறேன்.
எனது இந்த இராஜினாமா எனது சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் உங்களது கைகளை பலப்படுத்தும் என நான் மிக உறுதியாக நம்புகிறேன்.
- நன்றி-
உங்களது உண்மையுள்ள,
கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்.
Janathipathiku unmaya irukama Allah ku irunga mosque attack pannapaddu quran thee vaika paddathan piranhum muslimkal payanthu olichidku irukakolla unagu ennathuku governer post
ReplyDeleteஇவரின் பல கருத்துக்கள் உண்மை மற்றும் நாட்டு நிலமை எங்கு போய்
ReplyDeleteமுடியப்போகுதோ தெரியவில்லை தான்.
ஆனால், தான் நேர்மையாக சகல இன மக்களுக்காகவும் பாடுபட்டதாக சொல்லிருப்பது 100% பொய். இவர் முஸ்லிம்களுக்கு மட்டுமே கவர்னராக இருந்தார். இந்து மக்களின் கோவில் காணியை தான் ஆட்டையை போட்டதாக வீடியோ ஒன்றில் சொல்லியுள்ளார்.
Mr ajan present situation
ReplyDeleteWe have to be unity.
Other wise they will spoiled us.
இதன் பிரதி முஸ் லீம் தூதுவர்களுக்கும் பகிரப்படவேணும்
ReplyDeleteYou are Excellency. Congratulations to our Hero
ReplyDelete