Header Ads



தப்பினார் றிசாத்,, பயங்கரவாதத்துடன் தொடர்பில்லையென பொலிசார் சபாநாயகருக்கு அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷார்ட் பதியுதீன் தீவிரவாத செயற்பாடுகள் எதிலும் சம்பந்தப்பட்டிருக்கவில்லையென பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று -20- சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை பதில் பொலிஸ் மா அதிபர் கையளித்துள்ளார்.

தீவிரவாத தாக்குதல்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட பொலிஸ் குழு நடத்திய விசாரணைகளில் – ரிசார்ட் மீதான இதர குற்றச்சாட்டுக்கள் குறித்து முறைப்பாடுகள் கிடைத்தபோதிலும் அவருக்கு தீவிரவாதத்துடன் தொடர்பு இருப்பதாக எவரும் சாட்சியங்களை முன்வைக்கவோ – முறைப்பாடு செய்யவோ இல்லையென்று பதில் பொலிஸ் மா சபாநாயகரிடம் மேலும் கூறியிருப்பதாக அறியமுடிந்தது. tamilan

12 comments:

  1. மாஷா அ ல ல
    ما شاء الله

    ReplyDelete
  2. RATNASARANUKKU, WIYARWAI KOTTUM.
    B P CHECK PANNIKOLATTUM.

    ReplyDelete
  3. அல்ஹம்துலில்லாஹ்

    ReplyDelete
  4. சத்தியம் தோற்பதுமில்லை தோற்கப் போவதுமில்லை,உண்மை அழிவதுமில்லை அழியப் போவதுமில்லை.பொய் ஒருநாள் அழிந்து விடும்,தோற்றும் போய்விடும்.

    தலைவர் ரிஷாத் பதியுத்தீன் விடயத்தில் பொய்க்குற்றச்சாட்டு சுமத்திய அனைவரும் அவர் கண்முன்னே அழிந்து விடுவார்கள்.இது இயற்கையின் நியதி அதுதான் இறைவனின் நீதி.ஒருவரின்மீது அல்லது ஒரு சமுகத்தின்மீது யார் பொய்ப்பலி சுமத்துகிறார்களோ, அவர்களுக்கு கேடுபிடுத்து விட்டதென்றுதான் அர்த்தமாகும்.

    ரிஷாத் பதியுத்தீன் அவர்கள் சமகாலத்தின் இனமத பேதமில்லாத நாட்டுப்பற்றுள்ள ஒரு சிறந்த ஆளுமையுள்ள தலைவர் என்பதை கடந்தகால அவருடைய செயற்பாடுகள் மூலம் இனவாதிகள் உட்பட எல்லோரும் நன்கு அறிவார்கள். ஆனாலும், அரசியல் அதிகார மோகம் கொண்ட சில அரசியல் வாதிகளும், மதகுருமார்களும்,அவர் ஜனநாயக அரசியலிலும் தேசிய அரசியல் நீரோட்டத்திலும் பெற்றுக்கொண்ட வெற்றிகளை பொறுக்க முடியாமல், மிகவும் கேவலமாக நடந்து கொள்கிறார்கள் என்பது மனசாட்சியுள்ள அனைவருக்கும் தெரியும்.

    ரிஷாத் பதியுத்தீன் அநியாயத்துக்கு எதிராக போராடுகின்ற குரல் கொடுக்கின்ற நாட்டுப் பற்றுள்ள ஒரு போராளி. நாட்டையும் நாட்டு மக்களையும் முன்னேற்றப் பாதையில் கொண்டுவர வேண்டும் என்று தன்னுடைய காலநேரத்தை அர்பணிக்கின்ற தீவிரவாதியே தவிர, இனவாதிகள் ஊளையிடுகின்ற பயங்கரவாதி இல்லை என்பதை இனியும் புரிந்து கொள்ளாத முட்டாள்கள் ஒருபோதும் உருப்படவே மாட்டார்கள். அவ்வாறானவர்களை தெய்வம் நின்று கொல்லும் என்பது உறுதி...

    மலேசியாவிலிருந்து.....

    ReplyDelete
  5. Head like is not right . He had proved his innocence . Escape mean, he was not caught or proven .

    ReplyDelete
  6. MashaAllah Great News.. Allah always be with you and bless you... .

    ReplyDelete
  7. அப்ப விமல் வீரவன்ச மற்றும் சில தேரர்கள் சில mp எல்லோரும் என்னப்பா செய்யப்போகிறார்கள்?

    ReplyDelete
  8. So what about Wimal Weerawansa??

    ReplyDelete
  9. தலைப்பை மாற்றுங்கள். குற்றம் செய்தவன் தான் தப்ப முடியும். நிரபராதி எப்படி தப்புவது.

    ReplyDelete

Powered by Blogger.