ரிஷாட் பதியூதீனை மீண்டும், துரத்த ஆரம்பித்துள்ள மகிந்த அணி
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதின் அமைச்சு பதவிகளை ஏற்றுக்கொண்டால் அவருக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவதற்கு கூட்டு எதிர்க்கட்சியினர் நேற்று தீர்மானித்துள்ளனர்.
அத்துடன் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.
அந்த நம்பிக்கையில்லா யோசனை அடுத்த ஜுலை மாதம் 9 மற்றும் 10ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்து கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குழுவினர் நேற்று நாடாளுமன்றத்தில் கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது ரிஷாட் பதியூதினுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Post a Comment