Header Ads



"மரியாதைக்குரிய மூடர்களுக்கு, நலம் உண்டாகட்டும்" - மங்களவின் மற்றுமொரு அதிரடி டுவிட்டர் பதிவு


“புத்த பெருமான் என்பவர், தன்னை கொலை செய்யவந்த தேவதத்தவுக்குக் கூட விகாரைக்குள் நுழையத் தடை விதிக்காத புனிதர். அந்த உயரிய பண்பைக்கூட புரிந்துகொள்ள முடியாத மரியாதைக்குரிய மூடர்களுக்கு நலம் உண்டாகட்டும். அவர்கள் துன்பத்திலிருந்து மீண்டு, சுகம் பெறட்டும்” என்று அமைச்சர் மங்கள சமரவீர தனது டுவிட்டரில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

அமைச்சர்களான மங்கள சமரவீர, ராஜித சேனாரத்ன மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்ன ஆகியோர், கம்பஹா மாவட்டத்திலுள்ள விகாரைகளில் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்துகொள்வதைத் தடைசெய்து தீர்மானம் கம்பஹா சாசன காப்பாளர் சபையினால் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையிலேயே, இன்று (05) அமைச்சர் மங்கள சமரவீர தனது டுவிட்டரில் இவ்வாறான பதிவு ஒன்றைச் செய்துள்ளார்

No comments

Powered by Blogger.