Header Ads



முஸ்லிம்களுடைய வர்த்தகத்தை புறக்கணிக்கச்சொன்ன அஸ்கிரியபீடாதிபதிக்கு எதிரான பொலிஸில் முறைப்பாட்டை ரத்துச் செய்யாவிட்டால் பாரிய விளைவுகள் ஏற்படுமென எச்சரிக்கை

அரசாங்கத்திற்கு எதிராக மநாயக்க தேரர்கள் குறிப்பிடும் கருத்துக்களை முடக்குவதற்காகவே  அஸ்கிரியபீட மாநாயக்கர் மீது  பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டை மீள  பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிடின் ஒட்டுமொத்த பௌத்த  சிங்கள மக்களும் ஒன்றுபட வேண்டிய  நிலைமை தோற்றம் பெறும் என பாராளுமன்ற உறுப்பினர் சானக வக்கும்பர தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று -27- இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சி நாட்டு மக்களுக்கு எதிராக செயற்படும் போது குறைப்பாடுகளை சுட்டிக்காட்டும் உரிமை   மகாநாயக்க தேரர்களுக்கு  உண்டு. 

 அரசியலமைப்பின் பிரகாரம் பௌத்தமதத்திற்கு  அனைத்து இடங்களிலும் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்பதை  நடப்பு அரசாங்கம்  பின்பற்றவில்லை.தொடர்ந்து பௌத்த மத பிக்குகள்  பல அரசியல் பழிவாங்கள்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

 அத்துடன் பௌத்த மதத்தை  இரண்டாம் பட்சமாக்கும்  வழிமுறைகளும்    ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அஸ்கிரிய பீட மாநாயக்க தேரரை கைது செய்யுமாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இம் முறைப்பாட்டை செய்தவர்கள்    முறைப்பாட்டை மீள  பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிடின்  மதத் தலைவர்களை பாதுகாப்பதற்கு  சிங்கள பௌத்த மக்கள் அனைவரும் ஒன்றுப்பட வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு நிகழ்ந்தால்  பாரிய எதிர் விளைவுகள் ஏற்படும் என அவர் தெரிவித்தார்.

5 comments:

  1. Mottu one side promoting the racism, another side (Dalas) shy about this issue....??? So, the public is so idiots they think..!!!

    ReplyDelete
  2. காபிர்களின்,முனாபிக்களின் இந்தபோக்கிரிகளின் அச்சுறுத்தல்களுக்கு என்ன காரணம் கொண்டும் பயப்படாமல், அதுபற்றியும் நீதிமன்றத்தில் முறையிட்டு நீதியையும் நியாயத்தையும் எதிர்பார்ப்போம் .நிச்சியம் அநியாயம் செய்யப்பட்டவர்களுடன் அல்லாஹ் இருக்கின்றான். அவன் அவர்களுக்கு உதவிசெய்யப்போதுமானவன். இந்தப்போக்கிரிகளின் வம்புகளுக்கு என்ன காரணம்கொண்டும் விட்டுக்கொடுப்பையும் சமாளிப்புக்கும் செல்லவேண்டாம்.

    ReplyDelete
  3. அப்ப என்ன மறுபடியும் கொலை, கொள்ளை, தீ வைப்பா. நாட்டையே எரித்து விடுங்கடா.முஸ்லிம்களின் இரத்தத்தை குடிங்கள். அப்பதான் உங்க பசி அடங்கும்.

    ReplyDelete
  4. Mr Ali Sabri pls ask explanation from your party for this statement
    Don't you think that they are against to Muslims??

    ReplyDelete
  5. Jujment true why this politician is crying.

    ReplyDelete

Powered by Blogger.