Header Ads



இலங்கையில் பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் பயன்படுத்துவோருக்கு புதிய கட்டுப்பாடு

இலங்கையில் பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அதற்கான சட்டங்களில் திருத்தம் செய்வது தொடர்பில் தேசிய பாதுகாப்பு தொடர்பான கண்கானிப்பு குழு அவதானம் செலுத்தியுள்ளது.

கடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் அந்த குழுவிற்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் அழைக்கப்பட்டிருந்தார்.

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த கூடிய கருத்து மற்றும் காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்யப்படுகின்றன.

இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாக குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. இருக்கின்ற சட்டங்களையே நடைமுறைப்படுத்த வக்கில்லை அதுக்குள்ள புது சட்டம்..... வினோதமான இலங்கை. சட்டத்தை எழுதி புத்தகவடிவில் போட்டு தூசுதட்டாமல் அதை நடைமுறைப்படுத்துங்கப்பா.

    ReplyDelete

Powered by Blogger.