Header Ads



காயத்தின் மேல் மிளகாய், தூளை தடவியவர் மரணம்

நாய் கடித்தமைக்கு சிகிச்சை பெற்றுக்கொள்ளாத நபரொருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில மணிநேரங்களில் மரணித்த சம்பவமொன்று தம்புள்ள வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

கலேவெல தேவஹூவ ஹீனுக்கல பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதான சாந்த அபேரத்ன என்பவ​ரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன்றைக்கு சில மாதங்களுக்கு முன்னர் நாய்யொன்று அவரை கடித்துவிட்டதென, அந்த நபர், தன்னுடைய தாய்க்கு தெரிவித்துள்ளார். அவர், சிகிச்சைபெற்றுக்கொள்ளாது, அந்த காயத்தின் மேல், மிளகாய்தூளை தூவி, காயம் காய்ந்துவிடுமென, உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

எனினும், உடலில் ஏற்பட்ட சில மாற்றங்களை அடுத்து, நேற்று பிற்பகல், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்திய பரிசோதனைக்குப் பின்னர், சில மணிநேரத்திலேயே மரணித்துவிட்டார்.

1 comment:

  1. இல்லை இது டாக்டர் ஷாபியின் வேலையாக இருக்கும், குருநாகல் Deputy DIG இடம் சொல்லுங்கள் அவர் பாத்துபார் ஹாஹாஹா

    ReplyDelete

Powered by Blogger.