Header Ads



றிசாட் பதியூதீன் என்ற அடிப்படைவாதிக்கு, இந்த அரசாங்கம் அடிபணிந்துள்ளது - கம்மன்பில

அடிப்படைவாதிகளுக்கு அடிபணிந்து நடப்பு அரசாங்கம் மற்றும் காவற்துறை செயற்படுவதாக பிவித்துரு ஹெல உறுமய குற்றம் சுமத்தியுள்ளது.

பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில இதனை தெரிவித்துள்ளார்.

றிசாட் பதியூதீனுக்கு எதிராக தான் முறைப்பாடுகளை பதிவு செய்தேன்.

80 பக்கங்களை கொண்ட 16 பக்க குற்றச்சாட்டுக்கள் அடங்கிய இரண்டு ஆவணங்களை தான் கையளித்தேன்.

அந்த ஆவணங்கள் தொடர்பிலும் எந்தவித விசாரணைகளையும் காவற்துறையினர் இதுவரை மேற்கொள்ளவில்லை.

றிசாட் பதியூதீன் என்ற அடிப்படைவாதிக்கு இந்த அரசாங்கம் அடிபணிந்துள்ளது.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவானது அடிப்படைவாதிகளை நியாயப்படுத்தும் வகையில் செயற்படுகின்றது.

இதன் காரணமாகவே தாங்கள் குறித்த தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

9 comments:

  1. இவன் ஒரு லைசன்ஸ் மென்டல்

    ReplyDelete
  2. Neenga angam wahikkala kaaranam poyya athula nadikkalaathe.....bt meadila no.1 nadippuku raaza nee...

    ReplyDelete
  3. இன வாதியும் கீழ்சாதியும், சர்வதேச புகழ்பெற்ற கள்ளனுமான இந்த போக்கிரிக்கு எதிராக ரிஷாத் பதியுதின் உயர்நீதி மன்றத்தில் மனித உரிமை மீறல் வழக்கொன்றைத் தாக்கல்செய்து மிக தரம்வாய்ந்த சட்டத்தரணிகள் மூலம் அதை நிரூபிப்பதைத் தவிர இவனை அடக்க வேறு வழிதெரியவில்லை.

    ReplyDelete
  4. neeyum un kumbalgalum naaaasama poha...!!!

    ReplyDelete
  5. நீயே ஒரு மஹா சிங்கள்ள அடிப்படைவாதி நீ மற்றவர்களை பார்த்து அடிப்படை வாதி என்பது Great Joke.

    ReplyDelete
  6. ஏதோ தெரிவுக்குழுவுக்கு அங்கம் வகிக்க கம்மன்பிலவுக்கு அழைப்பு விடுத்த மாதிரி அவர் உளருகின்றார். தெரிவுக்குழு ஒன்றுக்கு எப்படிப்பட்டவர்கள் தெரிவுசெய்யப்பட வேண்டும் என்பதை அவர்களது (மறைமுக - Confidentiality)) தராதரங்களுக்கு ஏற்பவே அரசு தீர்மானிக்கின்றது. கம்மன்பில மாத்தயா அக்குழுவில் அங்கம் வகிக்க தகுதியற்றவர். எவரும் Submission செய்யமுடியும். அதற்கும் தராதரம் உண்டு. அதன் அடிப்படையிலேயே விசாரணைகளும் நடைபெறும். குரங்கின் கைகளில் யாரும் பூமாலைகளைக் கொடுப்பதில்லை.

    ReplyDelete
  7. அவுஸ்திரேலியாவில் உயர் கல்வி கற்றவர்,இப்படி முட்டாள்தனமாக பேசுவது,அவர் கல்வி கற்ற அவுக்ஷ்திரேலிய பழ்கலைக்கழகத்துக்கே அவமானம்.

    ReplyDelete
  8. ஐ.தே. கட்சியிலிருந்து தற்போதைக்கு சிறுபான்மை மக்களைப் பிரித்தெடுப்பது கடினமான காரியம் என்பதை உணர்ந்து கொண்ட எதிர் கட்சியினர் யாரை அழித்தேனும் ஆட்சிக்கு வர முயற்சி செய்கின்றனர். பெரும்பான்மையினரைத் தம்பக்கம் எடுத்துக் கொள்வதற்காக சிறுபான்யினர் மீது பழிகளைச் சுமத்தி அதன் மீது நடவடிக்கை எடுக்காத அரசாங்கத்தின் மீது சிங்கள மக்களை வெறுப்படையச் செய்து வாக்குச் சேர்ப்பது ஒரு திட்டம். அடுத்தது சிறுபான்மையினர் ஒன்று சேராமல் பார்த்துக்கொள்வதுடன் அவர்களுக்குள் காணப்படும் மிதவாதப்போக்குள்ள அரசியல்வாதிகளை மக்களிடமிருந்து அந்நியப்படுத்தி தீவிரவாதப்போக்குள்ள அரசியல்வாதிகளை வெற்றி பெறச்செய்து அவர்களுடன் ஐ.தே. கட்சி இணைந்து செயற்பட முடியாத நிலையை உருவாக்குதல். இரண்டாவது வேலையை ரத்ன சாமி கச்சிதமாக செய்து கொண்டிருக்கிறார். அவர் king maker அந்தஸ்தினைப் பெறவும் ஆட்சியாளர்களை அடக்கியாளவும் ஆசைப்படுகிறார். முந்தைய ஆட்சியை நானே கொண்டு வந்தேன் அதனை வீட்டுக்கு அனுப்பினேன் என்ற பெயரைப் பெற்றுக்கொள்ள ஆலாய்ப்பறக்கிறார். அவர் பெளத்த மக்களை ஒன்று சேர்க்க எந்த மட்டத்திற்கும் செல்லக் கூடும். சிறுபான்மையின மிதவாதக்கட்சிகள் பலம்பெறுவதுடன் அவர்களிடையே புரிந்துணர்வுடனான ஐக்கியம் காணப்படுமாயின் இலங்கையில் சிறபான்மையினர் சிறு கீறல்களுமின்றி வாழலாம். ஒன்று சேரவிடமாட்டாரகள் நாம் மறந்து விட்டிருக்கின்ற விடயங்களையும் ஞாபகமூட்டி ஆண்டு விழா கொண்டாட நம்பகுதிக்கு வருவார்கள். வெளிநாட்டில் ஒன்று சேர்ந்த செய்தி ஒன்று சில நாட்களுக்கு முன் உலாவிது. நெருப்பில்லாமல் புகையாது.

    ReplyDelete

Powered by Blogger.