Header Ads



திட்டமிட்டே எனது கடைக்குத் தீ வைத்திருக்கிறார்கள் - சியம்­ப­லா­கஸ்­கொட்­டுவ முஸ்லிம் நபரின் வேதனை

குரு­நாகல் மாவட்டம் சியம்­ப­லா­கஸ்­கொட்­டுவ – கட்­டு­பொத்த நகரில் முஸ்லிம் ஒரு­வ­ருக்குச் சொந்­த­மான இரண்டு கடைகள் நேற்று முன்­தினம் இரவு இனம் தெரி­யா­தோரால் தீயிட்டு எரிக்­கப்­பட்­டுள்­ளது. தீயினால் கொள்­முதல் கடை­யொன்றும் பென்சி சாமான்கள் அடங்­கிய கடை­யொன்றும் முற்­றாக எரிந்து சாம்­ப­லா­கி­யுள்­ளது.

இரு கடை­களும் முஸ்லிம் ஒரு­வ­ருக்குச் சொந்­த­மா­ன­தாகும். கட்­ட­டத்­துக்கும், பொருட்­க­ளுக்கும் ஏற்­பட்ட சேதம் சுமார் 75 இலட்சம் ரூபா என கடை­களின் உரி­மை­யாளர் ஏ.எச்.எம்.சிபாய்  தெரி­வித்தார்.

கட்­டு­பொத்த பொலிஸார் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­வ­துடன் அரச இர­சா­யன பகுப்­பாய்வு அதி­கா­ரி­களும் ஆய்­வு­களை நடாத்­தி­யுள்­ளனர்.
திங்­கட்­கி­ழமை இரவு 8.45 மணி­ய­ளவில் இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. கட்­டு­பொத்த நகரில் இந்த இரு கடைகள் மாத்­தி­ரமே முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மா­ன­தாகும். ஏனைய கடைகள் அனைத்தும் பெரும்­பான்மை இனத்­துக்குச் சொந்­த­மா­ன­வை­யாகும்.

கடை­களின் உரி­மை­யா­ள­ரான சியம்­ப­லா­கஸ்­கொட்­டு­வையைச் சேர்ந்த ஏ.எச்.எம்.சிபாயை ‘விடி­வெள்ளி’ தொடர்­பு­கொண்டு வின­வி­ய­போது அவர் பின்­வ­ரு­மாறு விப­ரித்தார்.

‘கட்­டு­பொத்த நகரில் நான் கடந்த 20 வரு­ட­கா­ல­மாக கொள்­முதல் கடையை நடத்தி வரு­கிறேன். பென்சி சாமான்கள் கடையை கடந்த 9 மாதங்­க­ளுக்கு முன்பே திறந்தேன். எனது கடைகள் மாத்­தி­ரமே முஸ்லிம் கடை­க­ளாகும்.’
அண்­மையில் எமது பகு­தியில் இடம்­பெற்ற வன்­செ­யல்­களின் பின்பு நான் கடை­களை அதி­க­மாகத் திறப்­ப­தில்லை. கடந்த சனிக்­கி­ழமை ½ மணி நேரமே திறந்­தி­ருந்தேன். திங்­கட்­கி­ழமை கடையைத் திறந்து வியா­பாரம் செய்து விட்டு மாலை 6 மணி­ய­ளவில் மூடி­விட்டுச் சென்றேன். அனைத்து மின்­சார சுவிட்ச்­க­ளையும் ஓப் செய்து விட்டே சென்றேன். மெய்ன் சுவிட்சும் என்னால் ஓப் செய்­யப்­பட்­டது.

அன்று இஷா தொழு­து­விட்டு பஸாரில் இருக்­கும்­போது எனது கடை தீப் பற்றி எரி­வ­தாகத் தகவல் கிடைத்­தது. நான் அங்கு சென்­ற­போது கடைகள் முழு­மை­யாக எரித்­தி­ருந்­தன. தீய­ணைப்பு படை­யினர் முழு­மை­யாக எரிந்­ததன் பின்பே வந்து சேர்ந்­தார்கள்.

இப்­ப­கு­தியில் ஏற்­பட்ட வன்­செ­யல்­க­ளுக்குப் பின்பு பீதி­யிலே இருந்தேன். இடைக்­கி­டையே கடையைத் திறந்தேன். பிரச்­சி­னைகள் உரு­வானால் எனது கடை இலக்கு வைக்­கப்­படும் என பெரும்­பான்மை இனத்­த­வர்கள் தெரி­வித்­தி­ருந்­தார்கள். எனக்கு கடை­களின் கட்­டடம், பொருட்கள் உட்­பட சுமார் 75 இலட்சம் ரூபா நஷ்­ட­மேற்­பட்­டுள்­ளது. நான் இன்­ஸூரன்ஸ் செய்து கொண்­டு­மில்லை. எனது வாழ்வாதாரம் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது. திட்டமிட்டே எனது கடைக்குத் தீ வைத்திருக்கிறார்கள். பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுவரை சந்தேகத்தின் பேரில் எவரும் கைது செய்யப்படவில்லை’ என்றார்.

No comments

Powered by Blogger.