Header Ads



'நாடு திரும்புகிறார் மாலிங்க'

உலகக்கிண்ணப் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், இன்று (11) நடைபெறவுள்ள போட்டியின் பின்னர் நாடு திரும்பவுள்ளதாக, இலங்கையணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங் தெரிவித்துள்ளார்.

மாலிங்கவின் மனைவியின் தாயார் காலமான நிலையில், அவரது இறுதி சடங்கில் பங்கேற்பதற்காகவே தான் நாடு திரும்பவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் இறுதி கிரியைகள் நிறைவடைந்தவுடன் மீண்டும் இங்கிலாந்து செல்ல எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.