Header Ads



ஷாபி விவகாரம் - இலங்கை வரலாற்றின் அதிக பக்கங்களை கொண்ட பீ அறிக்கை சமர்ப்பிப்பு

( எம்.எப்.எம்.பஸீர்)

இலங்கை வரலாற்றின் அதிக பக்கங்களை கொண்ட பீ அறிக்கை குற்றப் புலனாய்வு பிரிவினால் குருணாகல் நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 

வைத்தியர் செய்கு ஷியாப்தீன் மொஹமட் ஷாபி தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் சமர்பிக்கப்பட்ட பீ அறிக்கையே இந்த இடத்தை பிடித்துள்ளது.

210 பக்கங்களை கொண்ட இந்த பீ அறிக்கை குற்றவியல் விசாரணை ஒன்று தொடர்பில் நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட ( ஒரு தடவையில்) அதிக பக்கங்களை கொண்ட பீ அறிக்கையாக கருதப்படுகின்றது.

சி.ஐ.டி யின் சமூக கொள்ளை தொடர்பிலான விசாரணையறை அதிகாரிகள் இந்த அறிக்கையை சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது. அதில் வைத்தியர் ஷாபி விவகாரத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள சாட்சிகளின் சுருக்கமும், விசாரணை அதிகாரிகளின் அவதானிப்புகளும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.