Header Ads



கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை, தரமுயர்த்த இஸ்லாமிய அடிவருடிகள்தான் தடை

எதனையும் செய்யமுடியாத நிலையில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியலில் இருந்து ஒதுங்கி செய்யக்கூடியவர்களின் கைகளில் அரசியலை வழங்கவேண்டும் என ஈழவர் ஜனநாயக முன்னணியின் தலைவர் ஆர்.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது அக்கட்சியில் உள்ளவர்களின் உழைப்பல்ல, பலரின் உயிர்த்தியாகத்தினால் உருவாக்கப்பட்டதாகும். உன்னதமான செயற்பாட்டின் மூலமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒன்று உருவாக்கப்பட்டது.

ஆனால் அக்கட்சியினால் தமிழ் மக்களுக்கு இதுவரையில் எதனையும் பெற்றுக்கொடுக்க முடியவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் அனைத்தும் முடிவுக்கு கொண்டுவந்துள்ளது. தமிழ் மக்கள் அக்கட்சியினை நிராகரிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அதன் எதிரொளிதான் அண்மையில் கல்முனையில் சுமந்திரனால் துரத்தியடிக்கப்பட்ட சம்பவமாகும்.

இது கவலைக்குரிய விடயமாகு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ளவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்குவது நல்லமாகும்.

விடுதலைப்புலிகள் இயக்கம் அழியப்போகின்றது என விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தீர்க்க தரிசனத்தினால் உணர்ந்ததன் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை உருவாக்கி மக்களுக்கான ஜனநாயக சக்தியை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அக்கட்சியில் உள்ளவர்களின் உழைப்பல்ல, பலரின் உயிர்த்தியாகத்தினால், விலைமதிப்பற்ற விடுதலை போராட்டத்தினால் உருவாக்கப்பட்டதாகும். ஆனால் அக்கட்சியினால் தமிழ் மக்களுக்கு இதுவரையில் எதனையும் பெற்றுக்கொடுக்க முடியவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கால வாக்குறுதிகளில் ஒன்றான பத்தம்ச கோரிக்கைகளில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துதல், சிறையில் வாடிக்கொண்டிருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலைசெய்தல் என்பனவும் உள்ளது.

இன்று மூன்று வருடங்கள் பத்து மாதங்களை கடந்துள்ள போதிலும் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படவும் இல்லை, அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவும் இல்லை. சம்பந்தர் இன்னும் மூன்று மாதகால அவகாசம் கோரியுள்ளார்.

தேர்தல் காலத்தில் முன்வைக்கப்பட்ட பத்து அம்ச கோரிக்கைகளில் ஒரு கோரிக்கையினை நிறைவேற்ற நான்கு வருடங்கள் தேவையென்று சொன்னால் பத்து கோரிக்கைளையும் நிறைவேற்ற நாற்பது வருங்கள் தேவையாகும்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையினை இன்று அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவதற்கு சில இஸ்லாமிய அடிவருடிகள்தான் தடையாக இருக்கின்றது.

அவர்களே அரசாங்கத்தினை கொண்டு தடைசெய்து வருகின்றனர். வாதிடுவதற்கான அனைத்து அதிகாரமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உள்ளபோதிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராமுகமாக இருக்கின்றது.

முஸ்லிம் பிரதேசங்களுக்கு தேவையான நிர்வாக அலகுகளை வழங்கும்போது தமிழ் மக்கள் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. கிழக்கு மாகாணத்தில் அனைத்து இனமக்களும் ஒன்றாக வாழவே விரும்புகின்றோம்.

ஈழ விடுதலை போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் தமிழ் மக்களின் விடுதலை போராட்டம் தனியாக தமிழர்களுக்கான போராட்டமாக மட்டும் ஆரம்பிக்கவில்லை.

வடக்கு, கிழக்கு மலையம் ஆகியனவற்றைக்கொண்டு தமிழ் பேசும் மக்களுக்கான விடுதலைப்போராட்டமாகவ முன்னெடுக்கப்பட்டுவந்தது. இதனை முஸ்லிம் மக்கள் கருத்தில்கொள்ள வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியலில் இருந்து ஒதுங்கவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சொத்துகளான 16 நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யமுடியாது.

தமிழ் மக்களின் தேவையினை நோக்காக கொண்டுசெயற்படும் கட்சிகளிடம் குறித்த 16 நாடாளுமன்ற உறுப்புரிமையினையும் பாரப்படுத்த வேண்டிய காலத்தின் கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளீர்கள்.

3 comments:

  1. விட்டால் ஒவ்வொரு Muslim வீட்டையும் கேட்பீர்கல்.ஆனால் பெருபான்மையாக Muslim கள் வாழும் கிழக்கை வடக்குடன் இனைக்க வேண்டும்.சிறுபான்மையாக தமிழர்கள் வாழும் கல்முனையை உங்களுக்கு பிரிக்க வேண்டும்.ஏதோ அப்பன் வீட்டு சொத்து போல.இந்த பாட்சா பலிக்காது அன்னே,நீங்கள் கேட்பது போல் 20% தமிழர் பகுதிகளுக்குள் 70% மான Muslim கள் தினமும் பயன்படுத்தும் எத்தனையோ வளங்கள் உள்ளன.அவை அனைத்தையும் சேர்த்து தாரை வார்க்க முடியாது.எல்லைகள் நிர்ணயிக்கப்பட்ட பின் பிரிந்து செல்லலாம் அதைவிட்டு நீங்கள் நினைப்பது போல நாங்கள் உடுத்திருக்கும் சாரத்தையும் சேர்த்து தர முடியாது.அதுமட்டுமல்ல கனவிலும் நினைக்க வேண்டாம் கிழக்கை வடக்குடன் இணைக்க முடியும் என.sri Lanka வில் உள்ள அனைத்து மாகாணங்களும் போல் கிழக்கும் தனித்து இயங்கும்.அப்படி இல்லாவிட்டால் சுமார் 30 வருடங்களுக்குள் அண்டை நாட்டால் திணிக்கப்பட்ட மாகாண சபை முறை இல்லாமாலாக்கப்பட வேண்டும்.sri Lanka வுக்கு தமிழினம் வருவதற்கு முன் இங்கே வந்தவர்கள் நாங்கள்.சிங்கள தாயும் அராபிய தந்தைக்கும் பிறந்த வாரிசுகள்.உங்களை விட சிங்களவனுக்கும் இந்த நாட்டுக்கும் உரிய இரத்த சொந்தங்கள்.போர்துக்கீயர்,ஒல்லாந்தர்,ஆங்கிலேயருடன் எமது தாய் வழி சிங்கள சகோதரர்களுடன் இணைந்து நாட்டுக்காக போரிட்ட வீர தியாகிகள்.மாறாக உங்களைப் போல் போர்த்துக்கீய,ஒல்லாந்தர்,ஆங்கிலயேருடன் இணந்து இந்த நாட்டை கூட்டியும்,காட்டியும் கொடுக்கவில்லை,35 வருடங்களாக ஆயுதம் ஏந்தி பயங்கரவாதிகலாக இந்த நாட்டை அழிக்கவும் இல்லை அன்னே,

    ReplyDelete
  2. இனிவரும் காலங்களில் Muslim பாடசாலகலை கொஞ்ஞம் கொஞ்ஞமாக சிங்கள மொழிக்கு மாற்ற வேண்டும்,எதிர்கால எமது சமூகம் சிங்களத்தை தாய் மொழியாக பேச வேண்டும்.வட,கிழக்கில் உள்ள Muslim கள் தங்கள் வீடுகளில் சிங்களத்தை தாய் மொழியாக பாவிக்க வேண்டும்.நான் அதிகமான சிங்கள நண்பர்களுடன் வாழ்பவன்,பழகுபவன்,அவர்கள் அனைவரும் புத்திஜீவிகலும்,கல்வியில் உயரிய இடத்தில் உள்ளவர்கல்,அவர்களே சொல்கிறார்கள் சிங்கள தாய்மாருக்கும்,அராபிய தந்தைமாருக்கும் பிறந்தவர்கள் நீங்கள் எனவும் ஏன் உங்களுக்கு சிங்கள மொழியை தாய் மொழியாக பாவிக்க முடியும்தானே என கேட்கிறார்கள்.உன்மையும் அதுதான்.எனவே இப்படியான தூரோக தமிழ் இனத்தை நம்புவதை விட,Muslim அரசியல் வாதிகள்,புத்தி ஜீவிகல்,அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா,ஒவ்வொர் ஊர் பள்ளிவாசல் நிர்வாகிகல்,Muslim அமைப்புக்கள் எல்லாம் ஒண்றாக இன்சா அல்லாஹ் விரைவில் கலந்துரையாடல்கள் நடத்தி மிக விரைவாக எமது பாடசாலகல்,வீடுகளில் சிங்கள மொழியை பாவிப்பதுடன்,இந்த நாட்டுக்கும்,உலகுக்கும் அறிவிக்க வேண்டும் Sri Lanka வில் உள்ள Muslim களின் தாய் மொழி சிங்களம் என.இந்த மாற்றம் இந்த நாட்டில் எமது மக்களின் எதிர்கால பாதுக்கப்பு,உரிமை என்பவற்றுக்கு மிக மிக அவசியமானதும் விரைவாக ஆரம்பிக்க வேண்டிய நடவடிக்கை.அனைவரும் இதைப்பற்றி மிக ஆழமாகவும்,அவசியமாகவும்,விரைவாகவும் முடிவு எடுங்கள்.

    ReplyDelete
  3. This person just now jumped down in Sri Lankan Land no?

    ReplyDelete

Powered by Blogger.