Header Ads



சவுதியில் இருப்பதைவிட 100 மடங்கு அதிக சுதந்திரமும், உரிமையும் இலங்கையில் வழங்கப்பட்டுள்ளது

- Mano Ganesan -

முதலில் எனது அமைச்சு மொழி தொடர்பான எந்தவொரு சுற்று நிருபத்தையும் இதுவரை வெளியிடவில்லை என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.

இந்த விடயம் பற்றி முதலில் பேசியது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகும்.

அவர்தான், இந்நாட்டில் பொது இடங்களில் அரபு மொழி பாவிக்கப்படுவதை தவிர்த்து, இலங்கை அரசியலமைப்பு ஏற்றுக் கொண்டுள்ள மூன்று மொழி கொள்கையை கறாராக முன்னெடுக்கும்படி கூறியுள்ளார்.

பிரதமரின் இந்த கருத்தை கடைபிடிக்குமாறும், கண்காணிக்குமாறும் எனது அமைச்சின் மொழி விவகார அதிகாரிகளை நான் அறிவுறுத்தியுள்ளேன். அவ்வளவுதான்.

உங்களை போன்ற சிலருக்கு "புரியாமை" என்ற தொற்று நோய் மோசமாக பிடித்தாட்டுகிறது என நினைக்கிறேன். அல்லது சமூக ஊடகங்களை பயன்படுத்தி மலினத்தனமான விளம்பரம் தேடும் நோயோ எனவும் தெரியவில்லை.

மேலும் உங்களை போன்றோர் தூங்குகிறீர்களா அல்லது தூங்குவதை போன்று நடிக்கிறீர்களா என்றும் எனக்கு தெரியவில்லை.

இங்கே பிரதமரும், நானும் கூறுவதை முதலில் தெளிவாக புரிந்துக்கொள்ள முயலுங்கள்.

அரச நிறுவனங்கள், வீதிகள், சாலைகள் ஆகிய பொது இடங்கள் ஆகியவற்றில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் மாத்திரமே பெயர்பலகைகள் இடம்பெற வேண்டும்.

இது கொள்கை மட்டுமல்ல, இந்நாட்டு சட்டம்.

அரபு மொழியும் இந்த அரசு சார்நத பொது இடங்களில் இடம்பெற வேண்டுமென்றால் அதனை அரசியல் கோரிக்கையாக முன்வைத்து, போராடி, வெற்றி பெற்று, அரசியலமைப்பில் இடம்மபெற செய்து, இலங்கையின் மொழி சட்டத்தை "மூன்று மொழி" என்பதிலிருந்து "நான்கு மொழி" என மாற்றுங்கள்.

மற்றபடி, உங்கள் வீடுகளிலும், தனியார் நிறுவனங்களிலும், பள்ளிவாசல்களிலும் உங்களுக்கு விருப்பமான மொழிகளை நீங்கள் பயன்படுத்த எந்தவொரு தடையும் கிடையாது.

அந்த மொழி அரபுவோ, பாரசீகமோ, உருதுவோ, மலாயோ எதுவாகவும் இருக்கலாம். அதுபற்றி அரசாங்கம் அக்கறை கொள்ளவில்லை.

ஆகவே ஏதோ அரபு மொழி பாவனையை அரசாங்கம் தனியார் இல்லங்களிலும், பள்ளிவாசல்களிலும் தடை செய்து விட்டது போன்ற இல்லாத போலி பிரமையை உருவாக்க வேண்டாம்.

உண்மையில் சொல்லப்போனால் அரபு மொழியின் தாயகமான, சவுதி அராபியா வில் இருப்பதை விட நூறு மடங்கு அதிக சுதந்திரமும், உரிமையும் சகோதர மொழிகளுக்கும், மதங்களுக்கும் இலங்கையில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த உண்மையை மனசாட்சியுடன் சிந்திக்கும் ஒவ்வொரு இலங்கையரும் அறிவார். உங்களுக்கு இது தெரியாவிட்டால் நீங்கள் இலங்கையராக இருக்க முடியாது.

இந்த அடிப்படை உண்மையை புரிந்துக் கொண்டு இலங்கையில் இலங்கையராக தாய் மண்ணையும், தாய் மொழியையும் நேசித்து வாழ பழகுங்கள்.

தேவையற்ற பிரச்சினைகளை கிளப்பி இந்நாட்டில் இன்றுள்ள கொதிநிலை சமூக உணர்வுகளை மேலும் தூண்டி விட்டு, தேசிய ஒருமைப்பாட்டை இன்னமும் குழி தோண்டி புதைத்து அப்பாவி பாமர மக்களை ஆபத்தில் தள்ளாதீர்கள்.

13 comments:

  1. இப்படி தெளிவாக நீங்கள் இரு தினங்களுக்கு முன்பு கூறி இருந்தால் நாங்களும் ஏற்று கொள்வோம்.நாங்களும் அதைத்தான் சொல்கிறோம்,எமது வீடுகளில்,பள்ளிகளில் நாங்கள் அறபு மொழியை பாவிக்க வேண்டும்.நாங்கள் சொல்லவில்லை வீதிகளிலும்,அரச நிறுவனங்களிலும் பயன்படுத்த வேண்டும் என.ஆனால் கடந்த இரு நாட்களாக நீங்கள்தான் மொட்டையாக கூரினீர்கல் அறபு மொழி இந்த நாட்டுக்கு தேவயில்லை என.எனவே இப்போது போல் எப்போதும் தெளிவாக அறிக்கை விடுங்கள்.

    ReplyDelete
  2. சவூதியில் சுதந்திரம் இல்லை என கூற வேண்டாம்.ஏனெனில் வெளி நாட்டு தொழிலாளர்கள் கோடிக்கனக்கானோர் அங்கே வேலை செய்வதனால்தான் அவர்களின் குடும்பங்கள் நல்ல வாழ்க்கை வாழுகிறார்கள்,அவர்களின் பிள்ளைகலுக்கு சிறந்த கல்வி,உடை,உனவு கிடைக்கின்ரது.அறபு நாடுகலுக்கு தொழிலுக்கு எமது நாட்டிலிருந்து லச்சக் கணக்கானோர் தொழிலுக்கு போன பின்புதான் லச்சக் கணக்கான கல் வீடுகலும்,தொலைக்காட்சிகலும்,நவீன வாழ்க்கையும்,கல்வி,சுகாதாரம்,தனி நபர் வருமானம் உயர்வு,இன்னும் பல இலவச உதவிகள் கிடைத்தன.இவைகளை மறந்துவிடவேண்டாம் அமைச்சரே.

    ReplyDelete
  3. Muslim Schools have to change their medium of study from Tamil to Sinhala and English medium gradually. Why our children should learn Tamil language and Hindu Literature. What is the use of learning KAMBARAAMAYANAM,Kumbhakarna, THIRUKKURAL, etc for Muslims. This is a mistake did in the past and need to correct now.

    ReplyDelete
  4. ok ithai ippadiye surr nerufanamaga veli idungal parppom

    ReplyDelete
  5. Dear Brothers, Once the issue is cleared... Respect the statement and KEEP cool brothers. The country needs peace not debating each other to create bad situation any more.

    ReplyDelete
  6. Nizar, All students must learn whatever possible subjects even if they are languages or language based subjects. No harm. Its good for the development of co-existence. I learned Hinduism because that school had no Islam teacher. Obtained "A" grade which helped me a lot for my future career. Nice comment you cracked above. Minister Mano Ganeshan has no communalism. We all have to encourage him to make voice for us too. He is a politician who can easily catch by us.

    ReplyDelete
  7. What does he say? Makes no sense at all

    ReplyDelete
  8. இரண்டையும் ஒப்பிடுவதென்றால் சவுதியைப் பற்றியும் இஸ்லாத்தைப் பற்றியும் தெளிவான அறிவு இருக்க வேண்டும்.இந்தியாவோடு கூட இலங்கையை ஒப்பிட முடியாது .

    ReplyDelete
  9. Bro Suhood How you say he is not racist? What he talking is anti Arab mean Anti Muslim speech.His recent behavior shows that he changed his stance and working for some hidden agenda. Barbarian Saharan and Thowheed are not accepted by 99% Muslims.So because of few political stooges who worked for money, Muslims and Arabs are not responsible. Country's security is the responsibility of Government which he too a part. So he had to blame himself and the Government not Arabs or Saudi Arabia or Srilankan Muslims.

    People paying taxes for the services given by the government,in which
    Security is paramount service that government failed give. Indian Government had more concern about the security of Srilankan people than It's Government.So what this racist trying to do is to put the blame on Muslims to cover the inability, indifference and carelessness.

    ReplyDelete
  10. I agree with nizar's comments. Please implement as soon as possible.

    ReplyDelete
  11. மேல unknown என்கிற பெயரில் அசிங்கமான வார்த்தைகள் பிரயோகிக்கும் நபரின் பின்னூட்டத்தை வெளியிடும் jaffna இணையம். என்னுடைய ஆதங்கமாக ஆபாசமில்லாத பின்னூட்டத்தை வெளியிடாததன் நோக்கம் என்ன? ஏன் மூன்றாம் தரமான ஊடகமாக செயல்படுகிறீர்கள்? உங்களை போன்றவர்கள் தமிழ் பயங்கரவாதிகளுக்கும் தோட்டக்காட்டானுங்களுக்கும் பயந்தாள் நாம் எப்படி எம்முடைய எதிர்ப்பை வெளியிடுவது? தயவு செய்து இரண்டு பக்கமும் தொங்கிக்கொண்டு செய்திகள் போடாதீர்கள் சமூகத்திற்காக மட்டும் போடுங்கள்

    ReplyDelete

Powered by Blogger.