Header Ads



றிசாத்தை கட்சிதாவுவதற்காக SP திசாநாயக்கா, மேற்கொண்ட தொலைபேசி உரையாடல் வெளியாகியது

52 நாட்கள் அரசியல் பிரளயத்தின் போது,  மஹிந்த தலைமையிலான புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேரம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி திஸ்ஸாநாயக்க, அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடன் தொலைபேசியில் உரையாடிய போது. 

SB:               ரிஷாட்.... 

RB :              ஆம், அமைச்சரே!

SB:               ரிஷாட்.... 

RB:               ஆம், கதைக்கிறேன்... 

SB:               பேசக்கூடிய இடத்திலயா இருக்கிறீங்க? 

RB:               சொல்லுங்கள்... 

SB:     ஓட வேண்டிய ஓட்டங்களையெல்லாம் ஓடி முடித்துவிட்டோம். துமிந்த உட்பட எல்லோரும் முடிவாயிட்டு.  சின்னச்  சின்ன ஆட்களை உள்வாங்கி பிரயோசனம் இல்லை. இது தான் சந்தர்ப்பம்  நீங்கள் எல்லோரும் ஒரேயடியாக வந்திருங்கள் 

RB:               ஆஹ்ஹ்... 

SB:               பெரிய எதிர்பார்ப்போடு இருக்கிறோம். 

RB:               அப்படியா! 

SB:               இரண்டு ஜனாதிபதியும் ரெடியாக இருக்கின்றனர்.  இப்ப நீங்கள் வந்து அமர்வது மட்டும் தான் மீதியாக இருக்கின்றது. 

RB:               ம்ம்ம்….. 

SB:               கொழும்பிலா இருக்கிறீர்கள்? 
 RB:               சிறிய வேலை ஒன்றிற்காக ஒரு பயனம் வந்திருக்கின்றேன். 

SB:               நாளைக்கு... நாளைக்கு... 
 RB:               இரவைக்கு நின்றுதான் வருவேன், நாளைக்கு பார்ப்போம்... 
 SB:               கொழும்பு வந்ததும், என்னோடு தொடர்புகொள்ளுங்கள். 

2 comments:

  1. It is too late.... It should have been disclosed when Ranga Bandara opened this issue.....

    ReplyDelete
  2. அவர்களுக்கு கோபமே அதுதான்,அமைச்சர் மீது

    ReplyDelete

Powered by Blogger.