Header Ads



கைதான மொழி பெயர்ப்பாளர், பாராளுமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை


சஹ்ரான் ஹாஷிமுடன் நெருங்கிய தொடர்பைப் பேணியதாகக் கூறப்படு  கைது செய்யப்பட்டுள்ள  தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின்  முக்கியஸ்தரான பாராளுமன்ற ஹன்சார்ட் பிரிவின்  சிரேஷ்ட மொழி பெயர்ப்பாளர் மேலதிக விசாரணைகளுக்காக பாராளுமன்ற கட்டடத்தொகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

குருணாகல் - அலகொலதெனிய பகுதியில் தென்னந்தோப்பு ஒன்றுக்குள் முன்னெடுத்து செல்லப்பட்டதாகக் கூறப்படும் ஆயுதப் பயிற்சி முகாம் தொடர்பில் 21/4 தொடர் தற்கொலை தக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமுடன் நெருங்கிய தொடர்பைப் பேணியதாகக் கூறப்படு  கைது செய்யப்பட்டுள்ள  தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின்  முக்கியஸ்தரான பாராளுமன்ற ஹன்சார்ட் பிரிவின்  சிரேஷ்ட மொழி பெயர்ப்பாளர் மேலதிக விசாரணைகளுக்காக  பாராளுமன்ற கட்டடத்தொகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

கண்டி - அலவத்துகொட மாவத்துபொல இலக்கம் 60 எனும் முகவரியைக் கொண்ட 42 வயதான மொஹம்மட் நெளசாட் ஜமால்தீன் எனும் அந்த நபர்  மூன்று மாத தடுப்புக் காவலில் வைத்துக் விசாரிக்கப்பட்டு வரும் நிலையிலேயே சிறப்பு பொலிஸ் குழுவினரால் அவர்  இவ்வாறு பாராளுமன்ருக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான பாராளுமன்ற அலுவலக ஊழியரால் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் இதன்போது சோதனையிடப்பட்டதுடன் அவரால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்றதாக  விசாரணைகளுக்கு பொருப்பான பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  

இந்நிலையில் பாராளுமன்றில் அவசியமான சில ஸ்தல விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் அவரை மீள விசாரணை தடுப்பிடத்துக்கு அழைத்து செல்வதாகவும் அந்த அதிகாரி சுட்டிக்கடடினார். 



(எம்.எப்.எம்.பஸீர்)

No comments

Powered by Blogger.